Skip to main content

‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு மீண்டும் தடை... அதிர்ச்சியில் ப்ளூ சட்டை மாறன்!

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

blue sattai maran

 

சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’. இப்படம் கடந்த ஏப்ரல் மாதத்தில் சென்சார் குழுவினருக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. பொதுவாக சர்ச்சைக்குரிய வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் 'ஆன்டி இண்டியன்' படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் படத்தை முழுமையாக நிராகரித்து சென்சார் வழங்க மறுத்தனர்.

 

அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி எனச் சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. பெங்களூரில் பிரபல இயக்குநர் நாகபரணா தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் படத்தைப் பார்த்தனர். படம் பார்த்து முடித்த பிறகு, படம் மிகவும் சிறப்பாக உள்ளதென படக்குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்த மறுதணிக்கை குழுவினர், படத்திற்கு சென்சார் வழங்க வேண்டுமென்றால் படத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென நிபந்தனை விதித்தனர்.

 

அதாவது, “‘ஆன்டி இண்டியன்’ எனும் பெயரை மாற்றிவிட்டு வேறு பெயர் வைக்க வேண்டும். நடிகர் கபாலி எனும் வசனம் அடிக்கடி வருகிறது. அப்பெயரைக் கொண்ட வசனம் வரும் காட்சிகள் அனைத்தையும் நீக்க வேண்டும். கமுக, அகமுக என்று வரும் இரண்டு கட்சிகளின் பெயர்களையும் நீக்க வேண்டும். இப்படத்தில் வரும் தேசியக்கட்சி அரசியல்வாதி கதாபாத்திரம் ஒன்றின் பெயர் 'ராஜா' என்று இருக்கிறது. அந்தப் பெயரையும் நீக்க வேண்டும். நாங்கள் தரும் 38 கட்களையும் ஏற்றுக்கொண்டு, படத்தில் அவற்றை எடிட் செய்து மறு தணிக்கைக்கு உட்படுத்தினால், U/A சான்றிதழ் தருகிறோம்" என மறு தணிக்கை குழுவினர் கூறியுள்ளனர். மேற்கண்ட மாற்றங்களைப் படத்தில் செய்தால் அது படத்தின் போக்கையே பாதித்துவிடும் எனக் கருதிய ‘ஆன்டி இந்தியன்’ படக்குழுவினர், மேல் மறுதணிக்கைக்குப் படத்தை அனுப்ப முடிவுசெய்துள்ளனர். மறுதணிக்கையிலும் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காதது ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

'உட்தா பஞ்சாப்', 'பத்மாவதி' போன்ற ஹிந்தி படங்களுக்கு அடுத்து அதிகப்படியான கட்களை வாங்கிய திரைப்படம் ‘ஆன்டி இண்டியன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாக்கப்பட்டாரா ப்ளூ சட்டை மாறன்...? வெளியான புகைப்படமும் விளக்கமும்

Published on 20/03/2022 | Edited on 20/03/2022

 

Blue shirt Maran attacked ...? Photo released!

 

பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அது தொடர்பான விளக்கத்தை ப்ளூ சட்டை மாறன் அளித்துள்ளார்.

 

அண்மையில் வெளியான அஜித்தின் 'வலிமை' படம் குறித்து பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் பல்வேறு விமர்சனங்களை வைத்திருந்தார். இதற்கு முன்பே அஜித்தின் திரைப்படங்கள் குறித்த ப்ளூ சட்டை மாறனின் விமர்சனங்கள் அஜித் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சமூக வலைதளங்களில் மாறனுக்கு எதிராக அவரது ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

 

Blue shirt Maran attacked ...? Photo released!

 

அஜித் படம் மட்டுமில்லாது வெளியாகும் அனைத்து படங்கள் குறித்தும் அவருக்கே உரிய பாணியில் விமர்சனம் செய்து வந்தார். இயக்குநர் பாண்டியராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்கள் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனங்கள் குறித்து பல்வேறு கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். வலிமை திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வைத்த விமர்சனங்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனால் சமூக வலைத்தளங்களில் ப்ளூ சட்டை மாறனுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதற்கிடையே ப்ளூ சட்டை மாறன் பிவிஆர் திரையரங்கில் தாக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ''பிவிஆர்ல என்னடா ஆகும்? தியேட்டர்னா நாலு பேரு பார்க்க வருவாங்க. முடிஞ்சதும் வெளியே போவாங்க. அதை மறைஞ்சு நின்னு ஏன்டா போட்டோ எடுத்த? நேரில் வந்து எடுத்து தொலைய வேண்டியதுதான. இதை ஷேர் பண்ற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ... வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி'' என ப்ளூ சட்டை மாறன் அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

 

 

Next Story

"என்னால் நம்பவே முடியவில்லை" - 'ஆண்டி இண்டியன்' படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா கருத்து 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

director bharathiraja talk about anti indian movie

 

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விமர்சகர் என அறியப்பட்ட புளூ சட்டை மாறன் என்பவர் ‘ஆன்டி இண்டியன்’ எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் ஆதம்பாவா. படம் முழுமையடைந்த பிறகு சென்சாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், படத்திற்குத் தடை விதித்தனர். அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி மூலம் படத்தின் தடை நீங்கி வரும் 10ஆம் தேதி ‘ஆன்டி இண்டியன்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

 

ad

 

இந்நிலையில், 'ஆன்டி இண்டியன்' படத்தின் ப்ரிவியூ காட்சியைப் பார்த்த இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், பாக்யராஜ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

 

இப்படம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், “எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நீ இந்தப் படத்தை இயக்கியது என்னால் நம்பவே முடியவில்லை. இதுவரை நீ விமர்சித்த படங்களுக்குத் தகுதியானவன் என நிரூபித்துக் காட்டிருக்கிறாய். படம் நன்றாக இருந்தது, படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.