Skip to main content

"மோகன்லாலை இயக்கவுள்ளேன்" - அர்ஜுன் அறிவிப்பு

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

arjun to direct mohanlal

 

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அர்ஜுன். இப்போது விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் தனது மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக வைத்து ஒரு படம் எடுக்க முயற்சித்து வருகிறார். அதோடு மேலும் சில படங்களில் கவனம் செலுத்தி வரும் அர்ஜுன் நடிப்பது மட்டுமல்லால் இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

 

அந்த வகையில் 'மார்ட்டின்' என்ற படத்தில் கதையாசிரியராக பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அர்ஜுன் விரைவில் மோகன்லாலை வைத்து படமெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மோகன்லாலிடம் முன்னதாகவே சந்தித்துப் பேசியுள்ளதாகவும் நிச்சயம் இப்படம் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் இப்படம் இப்போதைக்கு ஆரம்பிக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு வெளியான 'மரைக்காயர்' படத்தில் மோகன்லாலுடன் இணைந்து அர்ஜுன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மோகன்லால் தற்போது ரஜினியின் 'ஜெயிலர்', லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்', தான் முதன் முதலாக இயக்கவுள்ள 'பரோஸ்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

“எனது குடும்பத்தில் மோடி என்றால் ரொம்பப் பிடிக்கும்” - அர்ஜுன் 

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
arjun about modi

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அதன்படி, நேற்று மாலை சென்னையில் நடந்த கேலோ விளையாட்டு போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார். அப்போது அவரை மரியாதை நிமித்தமாக தனது குடும்பத்துடன் சந்தித்துள்ளார் நடிகர் அர்ஜுன். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய கோவிலுக்கு அவரை அழைத்திருக்கிறேன். விரைவில் வருவதாக சொல்லியிருக்கிறார். நான் பிஜேபியில் இணையவில்லை. முதலில் அரசியல் நமக்கு தெரியாது. முதல் தடவை அவரை சந்திக்கிறேன். எனக்கு பிடித்த ஒரு ஆளுமை. எனது குடும்பத்திலும் மோடி என்றால் ரொம்பப் பிடிக்கும்” என்றார். சென்னை கெருகம்பாக்கதில் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.