Skip to main content

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல இயக்குநர்? - திரையுலகினர் அதிர்ச்சி

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

actor and director Sudheer Varma passed away

 

தெலுங்கு திரையுலகில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 'சுவாமி ரா ரா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுதீர் வர்மா. தொடர்ந்து நிகில் சித்தார்த், பிரபல நடிகரான நாகசைதன்யா உள்ளிட்ட பல பிரபலங்களை வைத்து படம் இயக்கி வந்த நிலையில், சில படங்களில் நடித்துள்ளார். இப்போது தெலுங்கில் முன்னணி நடிகரான ரவிதேஜாவை வைத்து ராவணாசுரா என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வந்தார். 

 

இந்த நிலையில், இயக்குநர் மற்றும் நடிகரான சுதீர் வர்மா காலமாகியுள்ளார். சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சுதீர் வர்மா விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுதீர் வர்மாவுக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது மறைவு தெலுங்கு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இவரது மறைவு தொடர்பாக நடிகர் சுதாகர் கோமகுல, "சுதீர் மிகவும் அழகான மற்றும் அன்பான மனிதர். உங்களை அறிந்ததும் உங்களுடன் பணியாற்றியதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது சகோதரா. நீங்கள் இப்போது இல்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை." எனக் குறிப்பிட்டுள்ளார். இது போன்று பலரும் தங்களது இரங்கல் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல நடிகர் 

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Johnny Wactor passed away in robbery incident

ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வந்தவர் நடிகர் ஜானி வேக்டர். ஜெனரல் ஹாஸ்பிட்டல் என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் கடந்த 25ஆம் தேதி அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 37.

இது தொடர்பாக ஆங்கில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மே 25ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் ஜானி வேக்டர், சக ஊழியருடன் இருந்த போது மாஸ்க் அணிந்த மூன்று மர்ம நபர்கள் அவரது காரில் உள்ள ஒரு பொருளை திருட முயல்வதைப் பார்த்துள்ளார். அவர்களை நோக்கி போகும் போது மர்ப நபர்களில் ஒருவர், ஜானி வேக்டரரை சுட்டுள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் ஹாலிவுட் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஜானி வேக்டரின் தாயார், ஒரு ஆங்கில ஊடகத்தில், “என் மகன் திருடர்களோடு சண்டையிடவில்லை. இருப்பினும் அவனைச் சுட்டுக்கொன்று விட்டனர். உடனே மூவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டு ஒருவர் கூட இன்னும் கைது செய்யப்படவில்லை” எனக் கூறினார்.   

Next Story

“நிலையற்ற வாழ்வில் அவரது மறைவு பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது” - சரத்குமார் இரங்கல்

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
sarathkumar condolence message for director surya prakash passed away

ராஜ்கிரண் மற்றும் வனிதா விஜயகுமார் நடிப்பில் 1996ஆம் அண்டு வெளியான மாணிக்கம் படத்தை இயக்கியவர் சூர்யபிரகாஷ். இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து சரத்குமாரை வைத்து மாயி மற்றும் திவான் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஜீவன் நடித்த அதிபர் மற்றும் தெலுங்கில் ராஜசேகர் நடித்த பாரதசிம்ஹா ரெட்டி ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, வருசநாடு என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வந்தார். இந்த படம் வெளியாவதில் தாமதமாகி வருகிறது. 

இந்த நிலையில் இன்று அதிகாலை இயக்குநர் சூர்யபிரகாஷ் மறைந்துள்ளார். மாரடைப்பு காரணமாக மறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது மறைவுற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சரத்குமார், “எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.