Skip to main content

பிரபல நடிகை வீட்டில் 30 சவரன் கொள்ளை... 3 மணிநேரத்தில் நகையை மீட்ட போலீஸ்...

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை ஜெயபாரதி, தமிழில் அலாவுதீனும் அற்புதவிளக்கும், மைக்கல் மதன காமராஜன், முத்து உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். 
 

jayabarathi

 

 

இவர் தற்போது சென்னையிலுள்ள நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை அன்று இவரது வீட்டிலிருந்து 30 சவரன் தங்க நகை திருடுபோனது.

இதனையடுத்து, ஜெயபாரதி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் திருட்டு போனது குறித்து புகாரளித்தாா். இதனடிப்படையில் அவரது வீட்டில் காவலாளியாக உள்ள நேபாளத்தைச் சோ்ந்த ஹாரக் பகதூா் மற்றும் தற்காலிக காா் ஓட்டுநா் இப்ராகிம் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனர். அவா்களிடம் இருந்து திருடு போன நகைகளை 3 மணி நேரத்தில் மீட்டனா்.

 

 

சார்ந்த செய்திகள்