Skip to main content

சையத் முஷ்டாக் அலி டிராஃபி: அபார வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தமிழ்நாடு!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

tamilnadu

 

2021 - 2022ஆம் ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டிராஃபி (இருபது ஓவர்) தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று (19.11.2021) தொடங்கியது. இந்த தொடரில் முதல் அரையிறுதியில் தமிழ்நாடும், ஹைதராபாத்தும் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த  ஹைதராபாத் அணி 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

இதனைத்தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி, 14.2 ஓவரில் 92 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. தமிழ்நாட்டு அணியில் அதிகபட்சமாக கேப்டன் விஜய் ஷங்கர் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

இதற்கிடையே, இரண்டாவது அரையிறுதியில் கர்நாடகா அணியும், விதர்பா அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெல்லும் அணியை தமிழ்நாடு நாளை மறுநாள் (22.11.21) நடைபெறும் இறுதிப் போட்டியில் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.