Skip to main content

"என் அம்மா ஃபோனில் கூறிய வார்த்தை.." இறந்த தாயார் உடனான நினைவைப் பகிர்ந்த ரஷீத் கான்!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020

 

Rashid Khan

 

'என் அம்மா ஃபோனில் கூறிய வார்த்தை, கிரிக்கெட்டை விட்டு விலகவேண்டும்' என்ற என் எண்ணத்தை மாற்றியது என ரஷீத் கான் உருக்கமாகப் பேசியுள்ளார்.

 

13-ஆவது ஐ.பி.எல் தொடரின் 47-ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில், ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளரான ரஷீத் கான், நான்கு ஓவர்கள் பந்துவீசி 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைபற்றினார். ரஷீத் கானின் சிக்கனமான பந்துவீச்சானது, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய டெல்லி அணியை மீள முடியாமல் செய்தது. 

 

தன்னுடைய கடந்த கால கிரிக்கெட் பயணம் குறித்துப் பேசிய ரஷீத் கான், "முதல்முறையாக ஆஃப்கானிஸ்தான் முதல்தர அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டேன். என்னுடைய சகோதரர், விளையாட்டை விடுத்துப் படிப்பில் கவனம் செலுத்தக் கூறி என்னைக் கண்டித்தார். நானும் கிரிக்கெட்டை விட்டுவிடலாம் என்று நினைத்தேன். அந்தச் சமயத்தில் என்னுடன் ஃபோனில் பேசிய என் அம்மா, "உன் விருப்பப்படியே விளையாடு. முடிவைப் பற்றி கவலைப்படாதே, நாளை வெற்றி பெறாவிட்டால், இன்னொரு நாள் உனக்கு வெற்றி கிடைக்கும்" என்றார். நான் தொடர்ந்து விளையாடினேன். பின் உள்ளூர் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. 3 போட்டிகளில் 21 விக்கெட்டினை வீழ்த்தினேன். அதன்பின் முதல்முறையாக 2015-ல் ஆஃப்கானிஸ்தான் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது" எனக் கூறினார்.

 

ரஷீத் கான் தாயார் கடந்த ஜூன் மாதம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

‘மும்பைக்கு மரண பயத்தைக் காட்டிய ரஷித்’ - நல்வாய்ப்பாக வென்ற மும்பை

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

'Rashid who showed Mumbai the fear' was a good win for Mumbai

 

16 ஆவது ஐபிஎல் லீக் தொடரின் 57 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் மும்பை - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்களை எடுத்தது. இது குஜராத் அணிக்கு எதிராக ஒரு அணி பதிவு செய்யும் அதிகபட்ச ஸ்கோராகும். அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 103 ரன்களை எடுத்தார். ஐபிஎல் போட்டிகளில் அவரது முதல் சதம் இதுவாகும். குஜராத் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

 

அதிகபட்சமாக ரஷித் கான் 79 ரன்களை குவித்தார். மும்பை அணி சார்பில் ஆகாஷ் மாத்வால் 3 விக்கெட்களையும் பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். நடப்பு சீசனில் மிடில் ஓவர்களில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பியூஷ் சாவ்லா 17 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஜடேஜா 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் குஜராத் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரஷித் கான் இன்று மட்டும் 10 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். 

 

இன்றைய போட்டியில் ரஷித் கானுக்கு கை கொடுக்க ஒரு வீரர் இருந்திருந்தால் கட்டாயம் குஜராத் வெற்றி பெற்றிருக்கும் என்பது நிதர்சனம். தனியாக போராடி ஆட்டத்தை பரபரப்பாக்கிய ரஷித், கை கொடுக்க இணை இருந்திருந்தால் ஆட்டத்தை குஜராத் அணிக்கு சாதகமாக முடித்து வைத்திருப்பார்.

 

 

Next Story

இரண்டு வீரர்களை 15 கோடிக்கு ஒப்பந்தம் செய்த அகமதாபாத் அணி

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

ipl

 

கரோனா பரவல் காரணமாக 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தள்ளிப்போக வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், ஐபிஎல் அணி நிர்வாகங்கள் தங்கள் அணியைக் கட்டமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் ஏலத்திற்கு முன்னதாகவே மூன்று வீரர்களை ஒப்பந்தம் செய்யலாம் என்பதால், இரு அணிகளும் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன.

 

இந்தநிலையில் அகமதாபாத் அணி, ஹர்திக் பாண்டியாவையும், ரஷித் கானையும் 15 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் அந்த அணி சுப்மன் கில்லை 7 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஹர்திக் பாண்டியா, அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.