Skip to main content

இந்தியாவிற்கு ஆறாவது பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா!

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

bajrang punia

 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா இதுவரை ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது. பளுதூக்குதலில் மீராபாய் சானுவும், மல்யுத்தத்தில் ரவிக்குமார் தஹியாவும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். பெண்களுக்கான குத்துச்சண்டையில் லோவ்லினாவும், பேட்மிண்டனில் சிந்துவும் வெண்கலப் புத்தகத்தை வென்றுள்ளனர். இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் வெண்கலத்தை வென்றுள்ளது.

 

இந்தநிலையில் இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான 65 கிலோ மல்யுத்த போட்டியில், இந்தியாவின் பஜ்ரங் புனியாவும், கஜகஸ்தானின் தவுலத் நியாஸ்பேகோவும் மோதினர். இதில் பஜ்ரங் புனியா 8-0 என தவுலத் நியாஸ்பேகோவை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

 

இது டோக்கியோ ஒலிம்பிக்சில் இந்தியா வென்றுள்ள ஆறாவது பதக்கமாகும். இதுவரை இந்த ஒலிம்பிக்சில் இந்தியா இரண்டு வெள்ளி பதக்கங்களையும், 4 வெண்கலங்களையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.