Skip to main content

தொடரும் மர்மம்; மூன்று மாதத்தில் நான்கு இளம் நடிகைகள் மரணம்!  

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
sophia leone passed away

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த சோபியா லியோன். 26 வயதான சோபியா லியோன், தனது 18வது வயதிலிருந்தே ஆபாச படங்களில் நடித்துவந்தார். இவர் அமெரிக்க மாடலிங் ஏஜென்ஸியான ‘101 மாடலிங் இங்க்’ நிறுவனத்தின் மூலம் அறிமுகமானா சில காலத்திலேயே பிக் ஸ்டாராக உருவெடுத்தார். படங்களில் நடிக்க தொடங்கிய 9 ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலராக உயர்ந்தது.

இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி நியூ மெக்சிகோவில் உள்ள அல்புகர்கி பகுதி அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வந்த சோபியா லியோனை அவரது குடும்பத்தினர் தொடர்புகொண்டனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சோபியா லியோன் தங்கிருந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு மயக்கநிலையில் கிடந்த சோபியா லியோனை பார்த்து அதிர்ச்சியந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சோபியா லியோன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த 9 ஆம் தேதி நிதி திரட்டும் சமூக வலைதளமான ‘கோ ஃபன்ட் மீ’ வலைதளத்தில் சோபியா லியோன் வாளர்ப்பு தந்தை மைக் ரொமேரோ, “சோபியாவின் இறந்த செய்தியை நான் ஒரு கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். அவரின் இழப்பு எங்களுக்கும், அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பு..'' என பதிவிட்டுள்ளார். மேலும் அவரது இறுதி சடங்கிற்கு நிதி திரட்டும் அறிவிப்பையும் வெளியிட்டார். முதலில், சோபியாவின் இறுதி சடங்கிற்கு 12,000 டாலராக இலக்கு தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 5,725 டாலர் சேர்த்து உயர்த்தப்பட்டது. 

இதனிடையே, நடிகையின் மரணம் குறித்து பேசிய அதிகாரி ஒருவர், “Albuquerque homicide detectives மூலம் நடிகையின் மரணம் பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும், நடிகை மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்” அந்நாட்டு ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் தரப்பிலும் சோபியா லியோனின் மரணம் தற்கொலை இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை இறப்பு செய்தி வெளியானதில் இருந்து அவருக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர் கடைசியாக கொடுத்த பேட்டி மற்றும் நடித்த படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் சோபியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், தீர விசாரணை செய்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களில் கேக்னே லின் தாய்னா ஃபீல்ட்ஸ்(24), கார்ட்டர்(36), ஜெஸ்ஸி ஜேன்(43) ஆகிய  மூன்று ஆபாச பட நடிகைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்த நிலையில், தற்போது 4ஆவதாக சோபியா லியோன் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், தைனா ஃபீல்ட்ஸ் முன்னதாக ஆபாச திரைப்படத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிர்வலைகளை எழுப்பி இருந்தார். அதன் பிறகே அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூன்று பேரின் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது நடிகை சோபி லியோன் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
US Action Announcement on Sanctions on Indian companies

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

US Action Announcement on Sanctions on Indian companies

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் கருவூலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘போருக்கு ஈரான் நாட்டின் யுஏவிக்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை ரகசியமாக விற்பனை செய்வதற்கும், நிதியுதவி செய்வதற்கும் இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆதலால், இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது’ எனத் தெரிவித்தது.