Skip to main content

உலகின் மிக இளம் வயது பிரதமர்... சாதனை படைத்த பெண்...

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

உலகின் மிகவும் இளம் வயது பிரதமராக சன்னா மரின் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்லாந்தின் போக்குவரத்து அமைச்சரான சன்னா மரின், சமூக ஜனநாயகக் கட்சியை வழிநடத்த தேர்வு செய்யப்பட்டு, நாட்டின் மிக இளம் வயது பிரதமராக பதவியேற்க உள்ளார். 

 

sanna marin to become the worlds youngest prime minister

 

 

34 வயதான மரின் பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் ஆவார். ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் பின்லாந்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது சமூக ஜனநாயக கட்சி. கடந்த ஜூன் மாதம் பிரதமராக அறிவிக்கப்பட்ட ஆண்டி ரின்னே பதவி விலகிய நிலையில், தற்போது சன்னா மரின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உக்ரைன் நாட்டின் பிரதமராக உள்ள ஒலெக்ஸி ஹான்சருக் (35) தான் தற்போது உலகின் மிக இளம் வயது பிரதமர் ஆவார். அவரின் இந்த சாதனையை முறியடித்து 34 வயதே ஆன சன்னா மரின் உலகின் மிக இளம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரும் - பின்லாந்து, சுவீடனை எச்சரித்த ரஷ்யா!

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

putin

 

ரஷ்யா, உக்ரைன் மீது மூன்றாவது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

 

இதற்கிடையே உக்ரைனுடனான பேச்சுவார்த்தைக்கு குழு அனுப்ப புதின் தயார் என ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிகாரிகளை போதைப்பொருளுக்கு அடிமையான கும்பல் என்றும், நாஜிக்கள் என்றும் விமர்சித்துள்ளதோடு, நாட்டின் தலைமையை தூக்கி எறியுமாறு உக்ரைன் ராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இந்தசூழலில் பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளை ரஷ்யா எச்சரித்துள்ளது. பின்லாந்தும், சுவீடனும் நேட்டோவில் சேர முயன்றால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள், உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் தொடங்கியபோது, நேட்டோவில் சேரப்போவதில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

நாட்டின் பிரதமராக பதவி வகித்த 16 வயது சிறுமி...

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

teenager becomes one day pm of finland

 

 

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது பதவியில் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை அமரவைத்தார். 

 

பின்லாந்து நாட்டின் பிரதமராக பதவிவகித்து வருபவர் சன்னா மரின். உலகின் மிக இளம்வயது பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர், அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது பதவியில் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை ஒருநாள் பணியாற்றவைத்தார். ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், அவர் அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்துறையில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்தார்.

 

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பிளான் இன்டர்நேஷனல் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப்பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆவா முர்டோ பின்லாந்து நாட்டின் ஒருநாள் பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.