Skip to main content

சாலையோரம் நின்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்! - தீவிர விசாரணையில் போலீசார்!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

The husband who left his wife in the shadows, the tragedy that happened to his wife when he returned

 

விழுப்புரம் மாவட்டம் மரகதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீஸாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவியரசி (31), இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கவியரசி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

 

இவரும் இவரது கணவரும் நேற்று காலை 11 மணி அளவில் செஞ்சியில் உள்ள கவியரசியின் தாய் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் தங்கள் 2 வயது ஆண் குழந்தையுடன் புறப்பட்டுச் சென்றனர். விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்த போது  கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் அட்டையை கவியரசி கணவர் வீட்டில் வைத்துவிட்டு வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

 

உடனே அவரது கணவர் முத்துக்குமார் மனைவியையும் இரண்டு வயது குழந்தையையும் தண்டிய மடைப் பகுதி சாலையோரம் மரநிழலில் நிற்க வைத்துவிட்டு தனது வீட்டிற்குத் தடுப்பூசி அட்டையை எடுத்து வருவதற்காக சென்றுள்ளார். அந்த நேரத்தில் அந்தச் சாலை வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், இரும்பு ராடை காட்டி மிரட்டி கவியரசி அணிந்திருந்த நகைகளைக் கழட்டி கொடுக்கும்படி மிரட்டியுள்ளார்.

 

The husband who left his wife in the shadows, the tragedy that happened to his wife when he returned

 

கவியரசியும் நகையைக் கழற்றித்தர மறுக்க ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர் தன் கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் கவியரசியின் தலையில் தாக்கியுள்ளனர். அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் நகையைப் பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். சற்று நேரத்தில் கர்ப்பிணிக்கான தடுப்பூசி போடும் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு முத்துக்குமார் அந்த இடத்திற்குத் திரும்பி வந்துள்ளார். மனைவி தாக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 

உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலையில் காயம்பட்டு கிடந்த கவியரசி உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது கணவர் முத்துக்குமாரின் புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை கொண்டு டூவீலரில் வந்த கொள்ளையர்களைப் பற்றி தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.