Skip to main content

வி.ஏ.ஓ. கொலை; கைதானவர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

VAO case goondas on criminal
லூர்து பிரான்சிஸ்

 

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (55). கடந்த மாதம் 25ம் தேதி காலை பணியில் இருந்தபோது அலுவலகத்துக்குள் நுழைந்த 2 மர்ம நம்பர்கள் அரிவாளால் அவரை வெட்டினர்.

 

இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்ட அங்கிருந்தவர்கள், அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லூர்து பிரான்சிஸ் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

 

இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் முதல்வர் ஸ்டாலின் வி.ஏ.ஓவின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து வி.ஏ.ஓவின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படியில் ராமசுப்பு என்பவரையும் மாரிமுத்து என்பவரையும் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

 

இந்த கொலை வழக்கில் புதிய விசாரணை அதிகாரியாக துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷை நியமித்து தென்மண்டல ஐஜி உத்தரவிட்டார். இந்நிலையில், வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய இருவர் மீதும் குண்டார் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்