Skip to main content

திமுக கோட்டையை மூன்றாக பிரித்த தமிழக அரசு...

Published on 15/08/2019 | Edited on 15/08/2019

வேலூர் மாவட்டத்தை நிர்வாக காரணங்களுக்காக மூன்றாக பிரிப்பதாக சுந்திர தினவிழாவில் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி. 

 

two more districts created from vellore district

 

 

வேலூர் மாவட்டம் என்பது தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களில் ஒன்று. இதனை பிரிக்க வேண்டும் என்பது கடந்த 30 ஆண்டு கால கோரிக்கை. இந்த கோரிக்கை நிறைவேறாமலே இருந்து வந்தது. திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டமும், அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் என மூன்றாக பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துவந்தது. இதற்காக சில கட்சிகளும், பல அமைப்புகளும் போராட்டமும் நடத்திவந்தன. 

இந்நிலையில் 2019 ஆகஸ்ட் 15ந்தேதி, சுந்திர தின உரையாற்றிய எடப்பாடி.பழனிச்சாமி, நிர்வாக காரணங்களுக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறது என அறிவித்துள்ளார். 

நீண்ட கால கோரிக்கை திடீரென செயல்பாட்டுக்கு வந்ததுயெப்படி என விசாரித்தபோது, வேலூர் மாவட்டம் என்பது பல வருடங்களாகவே திமுகவின் கோட்டையாகவே இருந்து வந்தன. கடந்த இரண்டு தேர்தலாக அது அதிமுகவின் கோட்டையாக மாறிவந்தது. இந்நிலையில் தற்போது அது மீண்டும் திமுகவின் கோட்டையாக மாறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் குடியாத்தம், ஆம்பூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றது, வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் திமுக கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அதிமுக அதனை தக்கவைத்துக்கொள்வதற்காக மாவட்டத்தை பிரிக்க முடிவு செய்து அதனை அறிவித்துள்ளது.

இதன் மூலமாக மூன்று மாவட்ட மக்களின் மதிப்பை, ஆதரவை பெறலாம் என நினைத்தே இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்; சபாநாயகர் அப்பாவு அதிரடி உத்தரவு!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Speaker appavu action for ADMK members

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள்  காலை (26.06.2024) வழக்கம் போல் தொடங்கியது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.

இதனையடுத்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டுள்ளனர். 8 நிமிடங்கள் அவையை நடக்கவிடாமல் செய்து இருக்கிறீர்கள். இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், “பிரச்சினையை சபையில் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பேசி இருக்கிறோம். கருப்புச் சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரத்துக்காகவே அதிமுகவினர் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர்” எனத் தெரிவித்தார். அதன்பிறகு அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்ட நிலையில் இந்த நடவடிக்கைய சபாநாயகர் அப்பாவு எடுத்துள்ளார். 

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
 Police arrest to Former Minister MR Vijayabaskar

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய வடமாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். வட மாநிலங்களுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.