Skip to main content

முசிறி தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு கரோனா!

Published on 27/09/2020 | Edited on 27/09/2020

 

trichy district, musiri admk mla coronavirus

திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வராசுக்கு கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் முன் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தொற்று உறுதியானது.

 

கரோனா தொற்று உறுதியான செல்வராசு எம்.எல்.ஏ. திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இதனிடையே, நேற்று (26/09/2020) பர்கூர் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனுக்கு மருத்துவ பரிசோதனையில் கரோனா உறுதியான நிலையில், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்