Skip to main content

மணல் திருடர்கள் மீது குண்டாஸ்! மத்திய மண்டல டிஐஜி அதிரடி ! 

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

 

திருச்சி மத்திய மண்டல டிஜஜியாக இருந்த லலிதா லெட்சுமி சென்னைக்கு மாற்றப்பட்டார். சென்னையில் ரயில்வே டிஜஜியாக இருந்த பாலகிருஷ்ணன் திருச்சி மாவட்ட மத்திய மண்டல டிஐஜியாக மாற்றப்பட்டு இன்று பதவியேற்றார் .

 

d

 

பதவியேற்றபின் பத்திரிகையாளர்களுடன் பேசிய அவர்,  பொறுப்பு ஏற்றவுடன் இப்போது எதுவும் சொல்ல முடியாது. அதே நேரத்தில் சட்டஒழுங்கு பிரச்சனைகள் பாதுகாக்கப்படும். சாலைவிபத்துகளை தடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய மண்டலம் முழுவதும் சாலையில் தேவையான இடங்களில் led விளக்குகள் பொருத்தப்படும். ஆறுகளில் மணல் கடத்துவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். 

பத்திரிகையாளர்கள் பேட்டிக்கு பின்பு ஐஜி வரதராஜீவை சந்தித்து வாழ்த்து பெற்றார். 


 

சார்ந்த செய்திகள்