Published on 18/08/2021 | Edited on 18/08/2021
ஆண்டுதோறும் இரண்டு முறை சூரியன் உச்சிக்கு வரும் அன்று 'நிழலில்லா நாள்' என்று அழைக்கப்படுகிறது. இன்று (18.08.2021) இரண்டாவது முறையாக நிழலில்லா நாள் நிகழ இருக்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் நிழலில்லா நாளை காணலாம். ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஆற்காடு, ஆரணி, ஆம்பூர், வாணியம்பாடி திருப்பத்தூர், ஓசூர் ஆகிய இடங்களில் நிழலில்லா நாளைக் காணலாம் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர் பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாளைக் காட்சிப்படுத்தவும் பொதுமக்களுக்கு அதுகுறித்து விளக்கமளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.