Skip to main content

தமிழகம் மற்றும் புதுவையில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள் !

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

17- வது மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழகம் (39) ,புதுச்சேரி (1), பீகார் (5), அசாம் (5) , சத்தீஸ்கர் (3) , ஜம்மு & காஷ்மீர் (2) , கர்நாடகா (14) , மகாராஷ்டிரா (10) , மணிப்பூர் (1) , ஒடிஷா (5) , திரிபுரா (1) , உத்தரப்பிரதேசம் (8) , மேற்கு வங்காளம் (3) உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைப்பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

 

general election



இதனை தொடர்ந்து வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலை 5.00 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று அதிக அளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுடன் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 18 ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



பி . சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்