Skip to main content

7.30 லட்சத்தை கடந்த டிஸ்சார்ஜ்... தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்!

Published on 15/11/2020 | Edited on 16/11/2020
today corona rate in tamilnadu

 

தமிழகத்தில் இன்றும் 2 ஆயிரத்திற்கும் குறைவாக 1,819 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,58,191 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 16,441 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 502 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 28-ஆவது நாளாக 1,000-க்கும் குறைவாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,08,668 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 694,213 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில், இன்று மேலும் 2,520 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,30,272 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 12 பேர் இறந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 11,478 ஆக அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்