Skip to main content

போக்குவரத்து கழக ஊதியப் பிரச்சனை - அரசாணைப்படி முழு ஊதியம் கோரி உண்ணாவிராதம்!!

Published on 24/07/2020 | Edited on 24/07/2020

 

 

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதியத்தில் குளறுபடி செய்த அரசை கண்டித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்படும் கூட்டமைப்பு தலைவர்கள் பல்லவன் இல்லம் அருகே  உண்னாவிரதத்தில் ஈடுபட்டனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் எல்.ஐ.சி. பிரீமியத்தில் முறைகேடு?; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 19/05/2024 | Edited on 19/05/2024
chennai Transport Corporation Workers LIC premium issue

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (M.T.C) சார்பில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.200 கோடி எல்.ஐ.சி. பிரீமியம் தொகையை சம்பள பட்டியல் பிரிவு உதவி மேலாளர் முறைகேடு செய்துவிட்டதாக  தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் பிரீமியம் தொகை 3 - 4 மாத கால அவகாசத்தில் மாதந்தோறும் செலுத்தப்படுகிறது. இது பற்றி தொழிலாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சியில் நவம்பர் 2023க்குரிய மாத சந்தா 15.04.2024 அன்று சரி செய்யப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை, நோட்டீஸ் வந்திருப்பதாக கூறி ஊடகங்களில் தொழில்நுட்பப் பணியாளர் துளசிதாஸ் தவறாக காட்டியுள்ளார். 

chennai Transport Corporation Workers LIC premium issue

அவரால் குற்றம் சாட்டப்பட்ட சம்பளப் பட்டியல் பிரிவு உதவி மேலாளரின் பணி ஊதியத்தைக் கணக்கிடுவது மட்டுமே. பணம் செலுத்துவது அவர் பணியல்ல. இதை அறிந்தும் அவர் மீது துளசிதாஸ் குற்றம்சாட்டியுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கமளித்துள்ளது. எனவே வதந்திகளை பரப்பாதீர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“15வது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த குழு...” - தமிழக அரசு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Committee to negotiate 15th Wage Agreement TN Govt

போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் போக்குவரத்துத் துறையினருக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை, போக்குவரத்துத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் அரசு சார்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் நடைபெற்று வந்தது.

அதன்படி நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது தமிழக அரசு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த குழுவில் நிதித்துறையின் கூடுதல் செயலாளர், தமிழக போக்குவரத்து கழகங்களின் 8 மண்டல மேலாளர்கள் உள்ளிட்ட 14 பேர் இடம் பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ளார்.