Skip to main content

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் நகரில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் சிறப்பே இங்கு பயிலும் மாணவ, மாணவிகளில் மாணவிகளுக்கே இங்கு முக்கியத்துவம். கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாணவிகளுக்கு 55 சதவிதம் ஒதுக்கப்படுகிறது, மாணவர்களுக்கு 45 சதவிதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. அதற்கு காரணம், கிராமங்கள் நிறைந்த பகுதி, பெண் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த கல்லூரி தொடங்கிய போதே விதிமுறைகள் வகுத்து வைத்து தற்போது வரை இந்த அரசு கலைக்கல்லூரியில் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த கல்வியாண்டு முதல் கல்விக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணத்தை பல்கலைக்கழக நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு என்பது 3 மடங்கு அதிகமாக உள்ளதால் மாணவ- மாணவிகள் அதிர்ச்சியாகினர்.

thiruvalluvar university exam fee raised students strike


இந்த கட்டணத்தை குறைக்க வேண்டுமென வலியுறுத்தி மாணவ- மாணவிகள் சார்பாக பல்கலைகழக நிர்வாகத்துக்கு வேண்டுக்கோள் விடுத்தனர். அதனை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அதிருப்தியான 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ- மாணவிகள் செப்டம்பர் 17ந்தேதி வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டம் செய்தனர். மறியல் செய்த மாணவ- மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உங்களின் கோரிக்கையை பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தருக்கு தெரியப்படுத்துகிறோம் எனச்சொல்லி வாக்குறுதி தந்ததன் விளைவாக சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தால் செய்யாரில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் இந்த கட்டண உயர்வை கண்டித்து அதன் கீழ் செயல்படும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ள பல அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடதக்கது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தனியார் பல்கலைக்கழகம் எதிரே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
cannabis chocolates seized from snack shop opposite private university.

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

காட்பாடி டி.எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் (வி.ஐ.டி.) எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21) , மனிஷ் குமார் கம்டி(21)  ஆகிய இருவரை காட்பாடி போலீசார் கைது செய்தனர். 

இந்தப் பகுதியில் இதுபோல் பல கடைகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதும் அதை கல்லூரி மாணவ - மாணவிகள் வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை காவல்துறை தொடர்ந்து ஆய்வு மூலம் பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்பவர்களும் அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.