Skip to main content

இளம்பெண்ணுக்கு நிர்வாண வீடியோ கால்; குருக்களை புரட்டியெடுத்த கணவன்

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

Temple priest video call with young girl

 

இளம்பெண்ணிடம் வீடியோ காலில் அந்தரங்க பாகத்தைக் காட்டிய கோயில் குருக்களை, அவரது கணவர் லெஃப்ட் ரைட் வாங்கும் வீடியோ காட்சி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 

கோயில் குருக்கள் ஒருவர் முகம் தெரியாத இளம்பெண்ணுக்குத் தவறான நோக்கத்துடன் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது, தனக்கு வீடியோ கால் செய்வது தன்னுடைய நண்பர்கள், உறவினர்களாகக் கூட இருக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த அந்த இளம்பெண், அந்த குருக்களின் காலை எடுத்துள்ளார். அந்த சமயம், தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்துவிட்ட கோயில் குருக்கள் அந்தப் பெண்ணிடம் தன்னுடைய மர்ம இடத்தைக் காட்டி சில்மிஷம் செய்துள்ளார்.

 

இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வீடியோ காலை கட் செய்துவிட்டு சிறிதுநேரம் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணை மேலும் அச்சப்படுத்தும் விதமாக, தன்னுடைய நிர்வாணப் படத்தை அந்தப் பெண்ணின் வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பியுள்ளார் அந்தக் கோயில் குருக்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப் பெண், இந்த சம்பவம் குறித்து தன்னுடைய கணவரிடம் தெரிவித்துள்ளார். 

 

இதையடுத்து, அந்தப் பெண்ணின் கணவர் தன் நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு அந்தக் கோயில் குருக்களின் போட்டோவை வைத்து அவர் எங்கே இருக்கிறார்? எந்த ஊரில் இருக்கிறார்? என்பதைக் கண்டுபிடித்துள்ளார். அதன்பிறகு, அந்தக் கோயில் குருக்களை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து, அவர் செய்த தவற்றை அவர் வாயாலேயே வரவழைத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.