Skip to main content

டாஸ்மாக்கில் நேற்று ரூபாய் 426.24 கோடிக்கு மதுவிற்பனை!

Published on 09/05/2021 | Edited on 09/05/2021

 

tasmac liquir sales in tamilnadu rs 426 crores

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் நாளை (10/05/2021) முதல் மே 24- ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து நேற்றும் (08/05/2021), இன்றும் (09/05/2021) 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று (08/05/2021) இரவு முதல் இன்று (09/05/2021) காலை வரை சென்னையில் இருந்து 3,325 பேருந்துகள் இயக்கப்பட்டு 1.33 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், சென்னையில் இருந்து 4,816 சிறப்புப் பேருந்துகள் இன்றும் இயக்கப்பட உள்ளன.

 

இந்த நிலையில் முழு ஊரடங்கின் போது, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகலும் மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. மேலும், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்றும், நாளையும் (09/05/2021) கூடுதலாக, இரண்டு மணி நேரம் அதாவது மாலை 06.00 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

இந்த அறிவிப்பால், டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை அமோக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று (08/05/2021) ஒரே நாளில் ரூபாய் 426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூபாய் 100.43 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூபாய் 82.59 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. மேலும், மதுரை மண்டலத்தில் ரூபாய் 87.28 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூபாய் 79.82 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூபாய் 76.12 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.