Skip to main content

“அரசியலில் சிவாஜியின் தோல்விக்கு எம்.ஜி.ஆர் தான் காரணம்!”- வாக்குறுதியால் வீழ்ந்தார் என்கிறார் இளங்கோவன்! 

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  இ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிவகாசியில் இன்று (13/11/2019) செய்தியாளர்களைச் சந்தித்தார். 
 

“தமிழக முதல்வர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து மிகவும் மோசமாகப் பேசியிருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் ஏற்பட்ட விபத்தினால் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி நாவடக்கத்துடன் பேச வேண்டும். சிவாஜிக்கு தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய காரணம் எம்ஜிஆருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முயன்றதால்தான். 
 

அதனால்தான், அந்தத் தேர்தலில் சரிவு ஏற்பட்டது. சிவாஜிகணேசன் திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் அவருடைய இயக்கம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும். பதவி பெரிதல்ல எம்ஜிஆர் அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி தான் பெரிது என்று நினைத்ததால்தான் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. சிவாஜி பற்றி பேசுவதை எடப்பாடிபழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். 

tamilnadu congress party evks elangovan press meet speech

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கிறோம். இன்னும் இரண்டு நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைவரை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி சந்திப்பார். அதிமுக நாங்குநேரியில் பெற்ற வெற்றி பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கியதால் தான். அதனால்தான், அங்கு காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. காங்கிரஸ் செய்த மிகப்பெரிய தவறு உள்ளூர் ஆட்களுக்கு வாய்ப்பு வழங்காமல் வெளியூர் வேட்பாளரைத் தேர்தல் நிறுத்தியது தான். அதுதான் தோல்விக்கான காரணம்.  
 

உள்ளாட்சித் தேர்தலை ஐந்து கட்டமாக நடத்துவது, ஐந்து கட்டத்திலும் ஊழல் செய்வதற்கு இந்த அரசாங்கம் தயாராவதற்குத்தான். மக்களைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கவே இப்படி ஒரு கருத்து சொல்லப்படுகிறது. இது ஏற்கக் கூடியதல்ல. 
 

ரஜினி அரசியலுக்கு கண்டிப்பாக வரமாட்டார். ஒவ்வொரு படமும் வெளிவரும் போது இதுபோன்ற கருத்தை கூறி வருகிறார். ரஜினிக்கு அரசியலுக்கு வருவதற்கான தைரியம் இல்லை. கமலஹாசன் மிக அழகாக யாருக்கும் புரியாத மொழியில் பேசுகிறார். போகப்போக பார்ப்போம் என்ன செய்கிறாரென்று. 
 


தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தொற்றுநோய் வைரஸ் காய்ச்சல் மூலமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை கண்டுகொள்வதே இல்லை. ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலை குறித்து .. சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் குற்றவாளிகளை மன்னித்து விட்டார்கள். நீதிமன்றம் தான் அதில் முடிவு எடுக்க வேண்டும்.
 

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும் மலர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம் விரைவில் அது மலரும். ஆனால்..  ஒருபோதும் தாமரை மலராது. முதல்வர் பத்து நாட்கள் வெளிநாடு சென்று வந்தார். அதனால் துணை முதல்வர் ஏழு நாட்கள் சென்றுள்ளார். துணை முதல்வர் பெயர் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கிறது. காரணம் தேனி தொகுதியில் 350 கோடி கொடுத்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வெற்றி பெற வைத்துள்ளார்கள். இதற்குத்தான் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.”என்றார் வழக்கம்போல் அதிரடியாக. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

வைரலான சி.சி.டி.வி.! ஓட்டல் ஓனரைக் கத்தியால் குத்திய சகோதரர்கள் கைது!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Sivakasi viral cctv police arrested two

‘பார்சல் வழங்குவதற்குத் தாமதமானதால் ஓட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து’ என சிவகாசி – மாரனேரியில் நடந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து மாரனேரி காவல்நிலையம், ஏ.துலுக்கபட்டியைச் சேர்ந்த முனியாண்டியின் மகன்கள் மாரீஸ்வரன் மற்றும் பாண்டீஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்தது.

ஜெகநாதன் என்பவர் ஆலங்குளம் சாலையில் ஜே.ஜே. ஓட்டல் நடத்துகிறார். அவருடைய ஓட்டல் தொழிலுக்கு உதவியாக மகன்கள் கரிமால், ராஜேஸ் கண்ணன், வாசுதேவன் ஆகியோர் இருந்து வருகின்றனர். இரவு 8 மணியளவில், மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் அந்த ஓட்டலுக்கு பார்சல் சாப்பாடு வாங்கச் சென்றனர். அப்போது ராஜேஸ் கண்ணன் ஓட்டலுக்குள் செல்லும்போது தெரியாமல் இடித்துவிடுகிறார். உடனே இருவரும்  “பார்த்துப் போகவேண்டியதுதானே..” என்று ராஜேஸ் கண்ணனைக் கெட்ட வார்த்தையால் திட்டுகின்றனர். கரிமாலும் ஓட்டலில் இருந்தவர்களும் இருவரையும் சத்தம்போட,  “உங்களை வந்து வச்சிக்கிறோம்.” என்று சென்றுவிட்டனர்.

அடுத்த 15 நிமிடங்களில் மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் மீண்டும் ஓட்டலுக்கு வந்து வாசுதேவனைக் கத்தியால் குத்தினார்கள். அப்போது கரிமாலும் வாசுதேவனும் பிடிக்க முயன்றபோது, வாசுதேவனுக்கு கையில் காயமேற்பட்டது. கரிமாலும் ஓட்டலில் இருந்த மற்றவர்களும் கத்தி வைத்திருந்த சகோதரர்களுடன் மல்லுக்கட்டியபோது “எங்கள பகைச்சுக்கிட்டா கத்தியால குத்தி கொன்றுவிடுவோம்..” என்று மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் கரிமால் அளித்த புகாரின் பேரில், மாரனேரி காவல்நிலையம் வழக்கு பதிவுசெய்து இருவரையும் தேடிவந்தது. தற்போது மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் கைதாகியுள்ளனர்.