Skip to main content

5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு- தமிழக அரசு அறிவிப்பு!

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. மாணவர்களின் தேர்வு முடிவுகளை கொண்டு தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்.

tamilnadu 5th and 8th std board exam tn govt announced


மேலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவு. ஏற்கனவே மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும், இதனை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என கூறிய நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 



 

சார்ந்த செய்திகள்