Skip to main content

விவசாயியிடம் லஞ்சம் வாங்கி கைதான தாட்கோ மேலாளர், உதவியாளர் பணியிடைநீக்கம்!

Published on 18/06/2023 | Edited on 18/06/2023

 

Tadco manager, assistant arrested for taking bribe from farmer dismissed!
மேலாளர் சாந்தி

 

சேலத்தில், விவசாயியிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்ட தாட்கோ பெண் மேலாளர், அலுவலக உதவியாளர் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் (42). விவசாயி. இவர், டிராக்டர் வாங்குவதற்காக மானிய உதவித்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற, சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாட்கோ அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். 

 

இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட தாட்கோ அலுவலகம், குமாரிடம் நேர்காணல் நடத்தியது. அதன்பேரில் டிராக்டர் வாங்க 50 சதவீத மானியமாக 7.50 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்காக அவரிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், கடனுதவிக்கான பணிகள் விரைவாக முடித்துக் கொடுக்கப்படும் என தாட்கோ மேலாளர் (பொறுப்பு) சாந்தி கூறியுள்ளார். 

 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குமார், இதுகுறித்து சேலம் லஞ்சம் ஒழிப்புப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையின் வழிகாட்டுதலின்பேரில் குமார், தாட்கோ மேலாளரை தொடர்பு கொண்டு நீங்கள் கேட்டபடியே பணம் கொடுக்கத் தயார் எனக்கூறியுள்ளார். அதற்காக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தாள்களைக் கொடுத்து அனுப்பினர். 

 

இந்தப் பணத்துடன் சென்ற குமார், தாட்கோ மேலாளர் சாந்தியிடம் கொடுத்தபோது, அதை அவர் அலுவலக உதவியாளர் சாந்தியிடம் (இவர் பெயரும் சாந்திதான்) கொடுக்கும்படி கூறினார். அதன்பேரில், லஞ்சப்பணத்தை உதவியாளர் சாந்தியிடம் கொடுத்தார்.

 

Tadco manager, assistant arrested for taking bribe from farmer dismissed!
உதவியாளர் சாந்தி

 

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பாய்ந்து சென்று அலுவலக உதவியாளர் சாந்தியை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் தாட்கோ மேலாளர் சாந்தியையும் கைது செய்தனர். 

 

இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து தாட்கோ மேலாளரின் வீட்டில் சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். 

 

பிடிபட்ட தாட்கோ மேலாளர் சாந்தியின் கணவர், மலேசியா நாட்டு ரயில்வே துறையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு அவர் மலேசியாவுக்குச் சென்று பணியாற்றி வருவது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட தாட்கோ மேலாளர் சாந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

புளியமரத்தில் மோதி அரசு பேருந்து விபத்து; 18க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Govt bus crash into tamarind tree; More than 18 people were injured

அண்மையாகவே அடிக்கடி அரசு பேருந்துகள் பழுதுபட்டு சாலையில் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் திருப்பத்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து புளிய மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு நாட்றம்பள்ளியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கட்டேரியம்மன் கோவில் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் செல்போனில் பேசியபடி பேருந்துக்கு நேர் எதிராக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விபத்தை தடுப்பதற்காக பேருந்து ஓட்டுநர் ஜீவா பேருந்தை சடாரென திருப்பியுள்ளார். அப்பொழுது சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் அரசு பேருந்து மோதி நின்றது. இதனால் பேருந்தின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பயணித்த பயணிகள் 18க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அரசு பேருந்து புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; பரமக்குடியில் பரபரப்பு

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
incident in broad daylight; There is excitement in Paramakudi

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பட்டப்பகலில் டீக்கடையில் பணியாற்றி வந்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பெண் காவலர் ஒருவர் கணவரால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ராமநாதபுரம் பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த டீக்கடையில் மேகலா என்ற பெண் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவை சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மேகலா அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனடியாக மணிகண்டனை பிடித்த அக்கம்பக்கத்தினர் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

incident in broad daylight; There is excitement in Paramakudi

இது தொடர்பான விசாரணையில் கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்த மேகலா அந்தப் பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் மேகலாவிற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மேகலா ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இருதரப்பையும் அழைத்த போலீசார் இருவரையும் கண்டித்து அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன் டீக்கடையில் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்த மேகலாவை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. பட்டப்பகலில் டீக்கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.