Skip to main content

அதிக முடியுடன் சுற்றிய மாணவர்கள்... முடியை வெட்ட ஏற்பாடு செய்த காவல்துறை!

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

Students around with more hair ... Police arranged to cut the hair!

 


சிதம்பரம் காவல்துறை உதவி ஆய்வாளர் நாகராஜன் மற்றும் காவல்துறையினர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளி, கல்லூரி நேரம் முடிந்து பேருந்து நிலையத்திற்கு வந்த மாணவர்களில் பலர் அதிக முடியுடன் காணப்பட்டனர். இந்த தோற்றம் மாணவர்கள் போல் இல்லாமல் வேறுவிதமாக இருந்தது. மேலும் சிலர் அவர்களின் தலை முடியில் கலர் சாயம் பூசியும், காதுகளில் கடுக்கன் மற்றும் தோடுகளை அணிந்திருந்தனர். இவர்களை அழைத்த காவல்துறையினர் இதுகுறித்து பேசினர்.  


அப்போது மாணவர்கள் இது 'புள்ளிங்கோ' ஸ்டைல் எனக் கூறினர். இதனால் காவலர்கள் மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவுரை கூறி, பேருந்து நிலையத்திலேயே அவர்களை அமர வைத்து, பேருந்து நிலையத்தில் சலூன் கடை நடத்திவரும் ஸ்ரீதர் என்பவரை அழைத்து தலையில் அதிக முடியுடன் இருந்த மாணவர்களுக்கு முடியை ஒட்ட வெட்டி விட்டனர். மேலும் பொது இடங்களுக்கும், பேருந்து நிலையம், பள்ளிகளுக்கு வரும்போது முடியை வெட்டி விட்டு வர வேண்டும் என்றும், மாணவர்கள் நல்லொழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினர். அதேபோல் பேருந்துகளில் பயணம் செய்த மாணவர்களிடம் அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது பேருந்து நிலையத்திலிருந்த பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.