உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் கரோனா மிக வேகமாகப் பரவி வந்த நிலையில், தற்போது தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகின்றது. இந்நிலையில் உயிரிழப்புகள் மட்டும் சென்னையில் அதிகரித்த வண்ணம் இருந்து வருகின்றது. இன்று வெளியான மொத்த உயிரிழப்புகள் விவரங்களிலும் சென்னை முதலிடத்தில் இருந்து வருகிறது.
1. சென்னை - 2,290
2. செங்கல்பட்டு - 302
3. மதுரை - 282
4. திருவள்ளூர் - 280
5. காஞ்சிபுரம் - 146
6. விருதுநகர் - 121
7. கோவை - 112