Skip to main content

சிவகாசி மாநகராட்சி:துணை மேயர் ஞானசேகரனா?-பீதியில் பெண் மேயர் தரப்பினர்!

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

Sivakasi Corporation: Deputy Mayor Gnanasekara? -People mayor party in panic!

 

சிவகாசி மாநகராட்சிக்கு யார் மேயர்? யார் துணை மேயர்? என்பதுதான் ஊரில் விவாதிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. மேயருக்கு சங்கீதா பெயரும், துணை மேயருக்கு விக்னேஷ் பிரியா பெயரும் அடிபடுகிறது. ஏனென்றால், பெண் மேயராக வரக்கூடியவர், துணை மேயரும் பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருவதுதான்.

 

sivakasi

                                                                   விக்னேஷ் பிரியா

 

‘மேயர், துணை மேயர் இருவருமே அனுபவம் இல்லாத புதுமுகங்களாக இருந்தால், நகராட்சி நிர்வாகத்தை நல்லபடியாகக் கொண்டுசெல்ல முடியாதே?’ என்ற பொதுவான கேள்விக்கு, “ஊரு நல்லா இருக்கணும்னா, திமுக பாரம்பரியமுள்ள 47-வது வார்டு ஜெயராணியை மேயர் ஆக்கிவிட்டு, 40-வது வார்டு ஞானசேகரனை துணை மேயர் ஆக்குவதுதான் சரியாக இருக்கும்” என்பதே, நகர் நலனில் அக்கறையுள்ள திமுகவினரின் பதிலாக இருக்கிறது.

 

Sivakasi Corporation: Deputy Mayor Gnanasekara? -People mayor party in panic!

                                                                     ஞானசேகரன்

 

அதே நேரத்தில், “சேர்மனாக இருந்த இரண்டு பீரியடிலும் ஞானசேகரன், நகராட்சி நிர்வாகத்தில் ஸ்ட்ரிக் ஆபீசராக அல்லவா நடந்துகொண்டார்? ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கெடுபிடி காட்டினாரே? பொதுமக்கள் பக்கம் நின்று சுயநலம்கொண்ட சிவகாசி முதலாளிகள் பலரையும் கடுமையாக எதிர்த்தாரே? காங்கிரஸிலிருந்து திமுகவுக்கு வந்தவர்,  கட்சி நிர்வாகிகளை எப்படி அனுசரித்துச் செல்வார்? யாரும் தவறான வழியில் வருமானம் பார்த்துவிட முடியாதபடி முட்டுக்கட்டை போடுவாரே? இந்த தடாலடி ஹீரோயிசத்தை கட்சியின் முக்கிய பிரமுகர்கள் யாரும் ரசிக்கமாட்டார்களே?” என நடைமுறைச் சிக்கல்களையும் சுட்டிக்காட்டினர்.  

Sivakasi Corporation: Deputy Mayor Gnanasekara? -People mayor party in panic!

                                                                             சங்கீதா

 

மேலும் அவர்கள்,  “ஊர் நன்மையா? அரசியல் கணக்கா? என்றெல்லாம் கேட்டுவிட முடியாது. ஏனென்றால், மேயர் ஆவதற்கு ரூ.5 கோடி என்று நிர்ணயித்துவிட,  மேயர் நாற்காலியில் அமர்வதற்கு ஆர்வம் காட்டிவரும் 34-வது வார்டு சங்கீதா தரப்பிலும், 26-வது வார்டு சூரியா தரப்பிலும்  ‘ஓ.கே.’ சொல்லிவிட்டனர்.

 

sivakasi

                                                                          ரேணுநித்திலா

 

38-வது வார்டு ரேணுநித்திலா தரப்பில் ரூ.3 கோடி வரை பேசிப் பார்த்துள்ளனர்.  ‘இன்னைக்கு அஞ்சு கோடி போட்டா, நாளைக்கே பத்து கோடி எடுத்துடலாம்’ என்ற வியாபாரக் கணக்குக்கு முன்னால், மக்கள் நலனெல்லாம் பின்னுக்குப் போய்விட்டது. அதனால்தான்,  ‘ஞானசேகரனா? வேண்டவே வேண்டாம்..’ என அவருக்கு எதிர்ப்பு வலுவாக இருக்கிறது.” என்றவர்கள், “சிவகாசி வட்டாரத்தில் சுயநல நிர்வாகிகளால் பலவீனப்பட்டுப்போன திமுகவை தூக்கி நிறுத்தவேண்டுமென்றால், ஞானசேகரன் போன்ற ஆளுமை அவசியம் தேவை. அவரைத் துணை மேயர் ஆக்குவதோடு, சிவகாசி மாநகர செயலாளர் என்ற கட்சிப் பொறுப்பையும் கூடுதலாகத் தந்தால், ஊருக்கும் நன்மை; கட்சிக்கும் நன்மை. இதுவே, பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.” என்றனர். 

நல்லது நடந்துவிடுமா? 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.