Skip to main content

14 வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டி சூடு வைத்த கொடூரம்: கூட்டு பாலியல் வன்கொடுமை எனவும் புகார்

Published on 24/10/2018 | Edited on 24/10/2018


 

sexual harassment



தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சிறுமியை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டி வைத்து சூடு வைத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
 

திருவையாறு பகுதியைச் சேர்ந்த சிறுமி செல்போனை திருடியதாக கூறி, அக்கம் பக்கத்தினர் ஐந்து பேர் அந்த சிறுமியை பிடித்து அடித்ததோடு, அந்த சிறுமியை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்ததாகவும், மரத்தில் கட்டப்பட்ட அந்த சிறுமிக்கு சூடு வைத்ததாகவும் கூறப்படுகிறது. 
 

அந்த ஐந்து பேரும் அந்த இடத்தில் இருந்து புறப்பட்ட பிறகு கட்டுகளை அவிழ்த்து, அந்த இடத்தில் இருந்து ஓடி வாழைத்தோப்பில் மறைந்து உயிர் தப்பி, வாழைத்தோப்பிற்கு வந்த ஒரு விவசாயி மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 

இந்த சம்பவம் தொடர்பாக திருவையாறு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை அளித்த புகாரில், தனது மகளை கடந்த ஆறு மாதங்களாக 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனை அறிந்த அந்த சிறுவனின் உறவினர்களான மூன்று ஆண்களும் தனது மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று கூறியிருக்கிறார்.
 

பாலியல் வன்கொடுமை மற்றம் அடித்து துன்புறுத்தியதாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், மகேந்திரன், வித்யா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். 16 வயது சிறுவன் சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டான். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்