Skip to main content

கலாம் நினைவு தினத்தில் அவரின் கனவு திட்டத்திற்கு நிதி கொடுத்த பள்ளி மாணவர்கள்!

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபொழுது தமிழ்நாட்டில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியுடன் தனிமையில் இருந்தபொழுது. அவரிடம் கலெக்ராக இருக்கிற உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன் செய்வீங்களா? என்று கேட்டிருக்கிறார். அய்யா நீங்க சொல்லி செய்யாமல் விடுவோமா சொல்லுங்கய்யா செய்றேன் என்று அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பணிவாக கூறியுள்ளார். தன் உறவினர்களுக்கு ஏதோ உதவி கேட்க போகிறார் என்ற எண்ணம் அந்த அதிகாரியிடம் இருந்தது.. 

 Schoolchildren who funded their dream project on Abdul Kalam's Memorial Day!


ஆனால் கலாம் கூறியது, நீங்க நல்ல பொறுப்புல இருக்கீங்க.. அந்த பொறுப்பை பயன்படுத்தி நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கனும், இன்னும் கொஞ்ச காலத்தில் தண்ணீர் இல்லாமல் போகப் போகுது அதை தடுக்கனும் அதற்கான நடவடிக்கை எடுக்கனும் என்று தனது கோரிக்கையை சொன்னார். இதைக் கேட்டு வியந்தார் அந்த ஆட்சியர். நாளை திட்டத்தை இப்போதே சிந்தித்திருக்கிறார் கலாம் என்று.. கலாம் அன்று சொன்னதைப்போல இன்று தண்ணீர் இல்லாத தமிழகம் உருவாகிவிட்டது. அவர் சொல்லி பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கலாமின் கனவுகளை நினைவாக்க இன்றைய தமிழக இளைஞர்கள் நீர்நிலை சீரமைப்பு பணிகளில் இறங்கியுள்ளனர்.
 

 Schoolchildren who funded their dream project on Abdul Kalam's Memorial Day!


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காட்டு கிராமத்தில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழு இளைஞர்களும் ஒரு பெரிய ஏரியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தான் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை ஒட்டங்காடு கிராமத்தில் நடந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் நினைவு தினத்தில் கலந்து கொண்டார். 

 

 Schoolchildren who funded their dream project on Abdul Kalam's Memorial Day!


நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட துணை ஆட்சியர் பி.சிவகுரு பிரபாகரன்,  UPSC-2019 தேர்வில் வெற்றி பெற்ற தஞ்சையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சுபாஷினி, ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட திட்ட இயக்குநர் மந்திராசலம், கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் மற்றும் புனல்வாசல் டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். அதனால் விழிப்புணர்வுடன் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. அப்போது பள்ளி மாணவர்கள் ஒட்டங்காடு பெரியகுளம் ஏரி தூர்வாருவதற்காக தங்களது சிறுசேமிப்பு பணம் ரூ.8406 நிதியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.

 Schoolchildren who funded their dream project on Abdul Kalam's Memorial Day!


பின்னர் ஒட்டங்காடு பெரியகுளத்தை தங்கள் சொந்த முயற்சியில், சொந்த செலவில் சீரமைக்கும் இளைஞர்கள், கிராமத்தினர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளதை பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.