Skip to main content

"மழையால் பாதிப்படைந்த பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

"Relief for rain affected crops will be provided soon" - Minister MRK Panneerselvam

 

69வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா கடலூர் மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒருவார காலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று கடலூரில் நடைபெற்றது. விழாவுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் கடலூர் ஐயப்பன், நெய்வேலி சபா.ராஜேந்திரன், விருத்தாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திலீப்குமார் திட்ட விளக்க உரையாற்றினார். விழாவில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு 4765 பயனாளிகளுக்கு ரூபாய் 25 கோடி மதிப்பிலான நிதி உதவிகளை வழங்கினர். இதில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர்க்கடன், மத்திய காலக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கருணை கடன், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன் கூட்டுறவு வார விழாவையொட்டி நடைபெற்ற கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

 

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவுத் துறையை டிஜிட்டல் மயமாக்கியுள்ளார். இதன் மூலம் விவசாயிகள் எளிதாக கடன் பெற முடிகிறது. இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள 159 கூட்டுறவு சங்கங்களில் 12,365 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரூபாய் 66 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கடன் பெற்றவர்கள் அதைத் திருப்பி செலுத்தாவிட்டாலும் அரசு நடவடிக்கை எடுக்கும்”  என்றார்.

 

அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள 23 மத்திய கூட்டுறவு வங்கிகளும் லாபத்தில் இயங்கி வருகின்றன. இவ்வாறு லாபத்தில் இயங்குவது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான். கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூபாய் 73000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு(2023) ரூபாய் 12000 கோடி கடன் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

 

ஆழ்துளை கிணறு அமைத்து மின் வசதி கிடைக்காத விவசாயிகள் நலன் கருதி ஒரு லட்சம் மின் இணைப்புகளை வழங்கினார். தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 13,000 டன் அரிசி கடத்தல் தடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று வருகிறது" என்றார்.

 

நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தண்ணீர் வடிந்த பிறகு சேதங்கள் கணக்கெடுக்கப்படும். பயிர்கள் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன்களை தள்ளுபடி செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது. அதையும் விரைவில் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.