Skip to main content

'பத்திரப்பதிவு டோக்கனையே இ-பாஸ் ஆக பயன்படுத்தலாம்'- தமிழக அரசு!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

registration department e pass tn government


பத்திரப்பதிவுக்கு வழங்கப்படும் டோக்கனையே இ- பாஸ் ஆகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 


இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். அதில் பத்திரப் பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனையே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ- பாஸ் ஆகப் பயன்படுத்திக்கொள்ளலாம். பத்திரப்பதிவுத்துறை டோக்கனையும், பதிவு செய்யப்போகும் ஆவணத்தையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

 

சார்ந்த செய்திகள்