Skip to main content

டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை, அதனால்தான் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது -ஆ.ராஜா

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
raja


 

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். நெடுஞ்சாலைத்துறையில் நடந்த ஊழல், டெண்டர் விவகாரம் குறித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியது, 


உலக வங்கியின் விதிமுறையில், வர்த்தக ரீதியாகவோ அல்லது இரத்த உறவு ரீதியான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. என்று உள்ளது. ஆனால் இவர்கள் கூறியதில் நெருங்கிய உறவு என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டு நெருங்கிய உறவுக்கு எந்தவித விளக்கமும் இல்லை என்று  கூறுகிறார்கள். சட்டத்தை தவறாக கூறிவிட்டு, அதற்குள் தன்னை காப்பாற்றிக்கொள்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.  
 

நாங்கள் லஞ்ச ஒழிப்பு விசாரணைதான் கேட்டோம் நீதிமன்றம்தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதாலும், வலுவான ஆதாரங்கள் இருக்கிறது என்பதாலையுமே வழக்கு சிபிஐ க்கு மாற்றபட்டிருக்கிறது.டெண்டரில் உலக வங்கி விதிமுறைகளை அவர்கள் பின்பற்றவில்லை. முதல்வர் என்னைப்போல் ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்ளட்டும். என்மீது வழக்கே இல்லை, உச்சநீதிமன்றம் என்னை பதவியைவிட்டு நீங்க சொல்லவில்லை. பொதுநலன் கருதி, நாடாளுமன்றம் முடங்கக்கூடாது என்பதற்காகவும், தூய்மையை நிரூபிப்பதற்காகவும் பதவியை ராஜினாமா செய்தேன். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்