Skip to main content

சென்னை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Published on 05/05/2018 | Edited on 05/05/2018


 

சென்னையில் இன்று நடைபெற்ற சென்னை பல்கலைக் கழக 160-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். விழாவுக்கு வேந்தரும் கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். துணைவேந்தர் டாக்டர் துரைசாமி வரவேற்று பேசினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்தி பேசினார்.
 

விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பட்டங்களை வழங்கினார். இந்த ஆண்டு நேரடியாக பட்டம், பரிசு பெற்றவர்கள் எண்ணிக்கை 572. இதில் இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் 2 பேர். 400 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். நேரில் வராமல் பட்டம் பெற்றவர்கள் 77,350 பேர், சர்வதேச சட்ட முதுகலை பட்டப்படிப்பில் மாணவி அபிராமி ஜனாதிபதியிடம் இருந்து தங்கப் பதக்கம் பெற்றார். 

படங்கள்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்