Skip to main content

பாலிடெக்னிக் மாணவர் வெட்டி கொலை-நெல்லையில் பரபரப்பு

Published on 26/02/2019 | Edited on 26/02/2019
 Polytechnic student murdered in nellai

 

நெல்லை மாவட்டம்  கீழமுன்னீர்பள்ளம் என்ற  இடத்தில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராஜா என்ற பாலிடெக்னிக் மாணவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, ஒன்றுகூடிய ஊர் மக்கள் இந்த கொலை சம்பவத்தை ஏற்படுத்திய நபர்களை போலீசார் பிடிக்க வேண்டும் என கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.

 

 Polytechnic student murdered in nellai

 

இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்னர் மக்கள் தர்ணாவை பின்வாங்கினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு வேறொரு சமூகத்தை சேர்ந்த ஒருவரது இறுதி ஊர்வலத்தில் தகராறு ஏற்பட்டதாகவும், அந்த தகராறு காரணமாகவே ராஜா வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிறது போலீஸ் தரப்பு. 

 

 

 

சார்ந்த செய்திகள்