Skip to main content

ஓடும் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர்

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
policeman



அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவராக பணியாற்றியவர் மணிகண்டன். இவர் செஞ்சியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் சென்றுள்ளார். குடிபோதையில் இருந்த மணிகண்டன், பெண் பயணிகளிடம் சில்மிஷம் செய்ததாக, பேருந்து நடத்துனர் ராஜ்குமாரிடம் பெண்கள் புகார் கூறியுள்ளனர். 
 

ராஜ்குமார் இதுபற்றி கேட்கும்போது, தான் போலீஸ்காரர் என்று சொல்லி ராஜ்குமாரையும், பெண்களையும் மிரட்டியுள்ளார். மேலும் நடத்துநர் ராஜ்குமாரை மணிகண்டன் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகார் அரியலூர் மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் செல்வராஜுக்கு சென்றுள்ளது.
 

இந்நிலையில் குடிபோதையில் பெண்களிடம் அத்துமீறிய ஆயுதப்படை காவலர் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து அரியலூர் மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்