Skip to main content

பேரறிவாளனின் பரோல் மேலும் நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு

Published on 28/06/2021 | Edited on 28/06/2021

 

நம


முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் பல வருடங்களாக சிறைத் தண்டனையை அனுபவித்துவருகின்றனர். இந்நிலையில், அவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் குரலெழுப்பிவருகிறார்கள். இந்நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பேரறிவாளன் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். அவரின் பரோல் காலம் விரைவில் நிறைவடைவதையொட்டி பரோல் காலத்தை மேலும் ஒருமாதம் நீட்டித்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்