Skip to main content

குளத்துக்குள்ள எப்படி சார் குடியிருக்கிறது..? அதிகாரிகளின் அலட்சியத்தால் வேதனை

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

officials contempt family in trouble

 

நாகை அருகே உத்தூரில் மூன்று பெண் குழந்தைகளோடு இருக்க இடம் கேட்டதற்கு ஊர் பொதுக் குளத்தில் குடிமனை பட்டா வழங்கியதோடு, குளத்திற்கு வீட்டு வரி ரசீது வழங்கிய கொடுமை வேதனை அளிக்கிறது.

 

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம், எரவாஞ்சேரி ஊராட்சி உத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாதவன் சசிகலா தம்பதியினர். இவர்களுக்கு ஏழாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கக்கூடிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக வீடோ, வீடு கட்ட இடமோ இல்லாததால் மாவட்ட ஆட்சியரிடம் வீட்டுமனைக்கேட்டு வீடு கட்டி தரும்படி மனு அளித்திருந்தனர்.

 

கடந்த ஆண்டு  ஜூலை மாதம் அம்பல் ஊராட்சியில் நடைபெற்ற  நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்  அருண் தம்புராஜ், மாதவன் மனைவி சசிகலா பெயரில் குடிமனை பட்டா வழங்கியுள்ளார். தங்களுக்கு கொடுத்த பட்டா சர்வே எண்ணைக் கொண்டு தங்களுடைய கிராமத்தில் இடத்தை தேடிய அலைந்தனர். அந்த பட்டாவுக்கு உரிய இடம் எங்கு இருக்கிறது என்றே தெரியாமல் தவித்தனர்.

 

மனம் நொந்த மாதவனும் அவரது மனைவியும் நாகை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தனக்கு கொடுத்த பட்டாவை கொடுத்து அந்த இடத்தை கண்டுபிடித்து தரும்படி கேட்டுள்ளனர். சர்வே எண்ணைக் கொண்டு ஆய்வு செய்த வட்டாட்சியருக்கு பேரதிர்ச்சி, ‘உங்களுக்கு கொடுத்த பட்டா இடம் ஊர்  பொது குளத்திற்குள்  இருக்கே, அத்திப்பட்டியை கடல் அடித்துச் சென்றதுபோல, உங்க இடத்தை குளம் அடித்துப் போயிருக்குமோ என்று தெரியல’ எனக் கூறியிருக்கிறார்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாதவனும் அவரது மனைவியும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் மற்றும் நாகை வட்டாட்சியரிடம் தங்களுக்கு வழங்கப்பட்ட குடிமனை பட்டா ஊர் பொது குளத்தில் இருப்பதால் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பலமுறை நடையாய் நடந்தனர். தாசில்தாரோ வேறு மனை வழங்காமல் கொடுத்த பட்டாவையும் திரும்ப வாங்கி சென்றுள்ளனர். அதோடு இல்லாமல் ஊராட்சி நிர்வாகத்தினரோ குளத்தில் உள்ள குடிமனை பட்டாவிற்கு வீட்டு வரி ரசீதும் கொடுத்து அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளனர்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.