Skip to main content

"24 மணி நேரத்திற்குள் பதில் வரணும்.." - மாணவன் பலியான சம்பவத்தில் அதிகாரிகள் அதிரடி!

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

jlk


சென்னை ஆழ்வார் திருநகரில் வெங்கடேஷ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த தீட்சித் என்ற 8 வயது மாணவர் இன்று காலை பள்ளி பேருந்து மோதி பள்ளி வளாகத்திலேயே பலியானார். பள்ளியின் பேருந்து ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி நகர்த்த முயன்ற போது, பின்னால் நின்றுகொண்டிருந்த மாணவன் தீட்சித் மீது பேருந்தின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே அந்த மாணவன் உயிரிழந்தான். மாணவனின் உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேலும் பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட அனைவரும்  கைது செய்யப்படும் வரையில் தன் மகனின் உடலை வாங்கப்போவதில்லை என்று பலியான சிறுவனின் பெற்றோர் கூறியிருந்தனர். 

 

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அலுவலகத்தில் செயலாளர் தலைமையில் அவசரக்கூட்டம் நடைபெற்றது. அதன்படி, இந்த சம்பவம் நடைபெற்ற பள்ளிக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்திற்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள 6 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்