Skip to main content

நிர்மலாதேவி வழக்கில் இருவருக்கு ஜாமீன்-உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
c

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் முருகன் ,கருப்புசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த வழக்கில் ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் முருகன் மற்றும் கருப்புசாமி மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் கருப்பசாமி மற்றும் முருகனுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

 

இதுகுறித்து முருகன் மற்றும் கருப்புசாமி குடும்பத்தினர் நம்மை தொடர்புகொண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். உறவினர்களின் மத்தியில் ஒத்துழைப்புமின்மை மற்றும் பொருளாதர நெருக்கடி காரணமாக நிர்மலா தேவியால் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்ய முடிய வில்லை.இல்லையெனில் அவருக்கும் ஜாமீன் கிடைத்திருக்கும்.

 

சார்ந்த செய்திகள்