Skip to main content

நிர்மலாதேவியிடம் வழங்கப்பட்ட 1360 பக்க குற்றப்பத்திரிக்கை!

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
nirmala devi

 

 

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி,  பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில்  இறுதிக்கட்ட குற்றப்பத்திரிக்கை,  விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரும் இன்று இந்நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய இம்மூவருக்கும் 1360 பக்கங்கள் கொண்ட முழுமையான குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.  செப்டம்பர் 19-ஆம் தேதி மீண்டும் இவர்களை ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டிருக்கிறது விருதுநகர் குற்றவியல்  நீதிமன்றம்.

 

 


 

சார்ந்த செய்திகள்