Skip to main content

குளிர் காரணமாக நீலகிரியில் காலை வாக்குப்பதிவு மந்தம்...!

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

நீலகிரி மாவட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குபதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கியது. குன்னூர் தாலுக்கா மற்றும் கோத்தகிரி தாலுக்கா ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ள தாலுக்கா  ஊராட்சி ஒன்றியங்களுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு நடைப்பெற்று வருகிறது.

 

Nilgiris-Local body election-Polling slowdown

 



இந்த வாக்குப் பதிவில் 177 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் , 17 கிராம ஊராட்சி தலைவர்கள், 22 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும்  2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான வாக்கு பதிவு தான் தற்போது நடந்து வருகிறது. மலை பிரதேசம் என்பதால்  காலையில் சற்று  குளிர் அதிகம் உள்ளதால் வாக்குப் பதிவு சற்று மந்தமாகவே காணப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

சார்ந்த செய்திகள்