Skip to main content

மகள்களுடன் சேர்ந்து மகனை கொடூரமாகக் கொன்ற தாய்!

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

 mother brutally incident  her son along with her daughters

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ளது நாச்சுலியேந்தல் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அழகேஸ்வரன் - இந்திரா தம்பதி. இவர்களுக்கு தமிழரசி, கலையரசி என இரண்டு மகள்களும், அலெக்ஸ் பாண்டியன் என்கிற ஒரு மகனும் இருக்கின்றனர். 28 வயதான இவர், போர்வெல் இயந்திரம் வைக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். அதே சமயம், சகோதரிகள் இரண்டு பேருக்கும் திருமணமான நிலையில், திருமணம் ஆகாத அலெக்ஸ் பாண்டியன் தன்னுடைய தாய் இந்திராவுடன் வசித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதியன்று அலெக்ஸ் தனது வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அந்த சமயம், அலெக்ஸ் பாண்டியன் வீட்டின் உள்ளே இருக்கின்ற ஹாலில் படுத்துக்கொண்டிருந்த நிலையில், அவரது வீட்டுக் கதவும் திறந்து கிடந்துள்ளது. அப்போது, திடுதிப்பென உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை எடுத்து, அலெக்ஸ் பாண்டியனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மேலும், ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் மகனைப் பார்த்து அலறிய இந்திரா, கண்ணீர் விட்டுக் கதறி அழுதுள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அலெக்ஸின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

அதன்பிறகு, அலெக்ஸின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின் தலைமையில் 2 தனிப்படைகள்  அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அலெக்ஸின் தாயாரான இந்திராவுக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றது. ஆனால், அத்தகைய சொத்துக்கள் ஆண் வாரிசான அலெக்ஸ் பாண்டியனுக்கு கிடைக்கக் கூடாது என தகராறு செய்து வந்துள்ளனர். அதே சமயம், அலெக்ஸ் பாண்டியனுக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு இருப்பதால், அந்த சொத்துக்கள் நம்மை விட்டு போய்விடும் என அவருடைய சகோதரிகள் கருதியதாகத் தெரிகிறது. இதையடுத்து, அந்த சொத்துக்களை பெண் பிள்ளைகள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என திட்டம் தீட்டி, அலெக்ஸ் பாண்டியனை அவரது உடன் பிறந்த சகோதரிகளும், தாய் இந்திராவும் சேர்ந்து கூலிப்படையை விட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதைக்கேட்டு ஆடிப் போன போலீசார், இச்சம்பவத்திற்கு காரணமான தாய் இந்திரா மற்றும் இரண்டு மகள்களை கைது செய்தனர்.

 

பின்னர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கூலிப்படையை சேர்ந்த வினித், விஜயகுமார், வெங்கடேஸ்வரன் உள்பட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சொத்துக்காக பெற்ற மகனையே கொலை செய்த தாயின் செயல் காரைக்குடி மக்களை குலை நடுங்க வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.