Published on 04/04/2022 | Edited on 04/04/2022
அவசர காலங்களில் காவல்துறையினரின் சேவையைப் பெற புதிய செயலி ஒன்றை தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது.
அவசர காலங்களில் காவல்துறையினரின் சேவையைப் பெற 'காவல் உதவி செயலி' என்ற புதிய செயலி ஒன்றை தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது. இந்தச் செயலியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் அறிமுகப்படுத்தினார். அறிமுக விழாவில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.
காவல்துறையின் முந்தைய செயலியில் ஒரே ஒரு சேவை வசதி மட்டுமே இருந்த நிலையில், இந்தப் புதிய செயலியில் 60 சேவை வசதிகள் இருப்பதாக அறிமுக விழாவில் தெரிவிக்கப்பட்டது.