Skip to main content

1500 பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன் - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 21/05/2018 | Edited on 21/05/2018
sen

 

’’1,500 தொடக்க பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்’’ என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலர் அண்ணாமலை.


அவர் மேலும்,   ‘’ பள்ளிகளை மூடவில்லை இணைக்கின்றோம் என கூறுகிறார் அமைச்சர். இணைக்கின்றோம் என்ற பெயரில் பள்ளிகளை மூடுகிறார்கள்.  இது  ஆசிரியர் விரோதப்போக்கு என்பதைவிட மக்களின் விரோதப்போக்கு என்பதே சரி.

 

அரசாணை 101ன் படி  பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.   முதன்மை கல்வி அலுவலரிடம் அதிகாரத்தை குவிப்பது ஊழலுக்கே வழிவகை செய்யும்.  மாவட்ட அளவில் பணி செய்ய போதிய அதிகாரிகள் இல்லாத நிலை உள்ளது.   

 

மாவட்டத்தின் மொத்த அதிகாரத்தையும் முதன்மை கல்வி செயலருக்கு அளிப்பது தவறு’’என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பாஜகவின் அதிகார வெறி இதன் மூலம் தெரிகிறது''-செல்வப்பெருந்தகை பேட்டி

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
"BJP's hunger for power is evident through this" - Selvaperunthakai interview

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் கடந்த 17.06.2024 அன்று காலை 9 மணியளவில் நின்று கொண்டிருந்த சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ரயில் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''உபகரணங்கள் வாங்குவதற்கு பதிலாக, பாதுகாப்பிற்கு செலவு செய்வதற்கு பதிலாக, ஆடம்பர வீடுகள் கட்டுவதும், சுற்றுலா மாளிகை கட்டுவதும், அந்தச் சுற்றுலா மாளிகை பங்களா வீடுகளுக்கு விலை உயர்ந்த பர்னிச்சர்களை வாங்குவதிலும் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள இடத்தில் இவர்கள் கவனம் செலுத்தவில்லை என்று தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு சிஏஜி அறிக்கை சொல்கிறது. ஆனால் மெத்தனபோக்கோடு இப்படி விபத்துகளை தொடர்ந்து பாஜக அரசு அனுமதித்து இருக்கிறது.

காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகவும், ரயில்வேதுறை அமைச்சராகவும் இருந்த ஓ.வி.அழகேசன் அரியலூர் விபத்து ஏற்பட்டவுடன் பதவியை ராஜினாமா செய்தார். சாஸ்திரியும் ராஜினாமா செய்திருக்கிறார். மம்தா பானர்ஜியும் ரயில்வேதுறை அமைச்சராக இருந்த பொழுது விபத்து நடத்தவுடன் ராஜினாமா செய்தார். நிதிஷ்குமார் ரயில்வே துறை அமைச்சராக இருந்த பொழுது ராஜினாமா செய்தார். ஏன் பாஜக அமைச்சர்கள் மட்டும் ராஜினாமா செய்ய மறுக்கிறார்கள். பிடிவாதமாக இருக்கிறார்கள். அதிகார வெறி என்பது இதன் மூலமாக தெரிகிறது. ஆகவே இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட விபத்துக்களை தவிர்க்க வேண்டும். சிஏஜி அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் லட்சக்கணக்கான கோடி நிதியை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்''என்றார்.

Next Story

'அவகாசத்தை மீறினால்... ' - வெளி மாநில பதிவு எண் பேருந்து விவகாரத்தில் அமைச்சர் பதில்

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
 'If the time limit is exceeded...'-Minister's reply on the bus issue with out-of-state registration number

அவகாசத்தை மீறி திங்கட்கிழமைக்கு மேல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் எனத் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெளிமாநில  பதிவு எண்  கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில ஆம்னி  பதிவு எண் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படுவதால் தமிழக அரசுக்கும் போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம், சாலை வரி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவை முழுமையாகப் பின்பற்றப்படாத சூழ்நிலையில் நாளை முதல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்கக் கூடாது எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நேற்று அறிவுறுத்தல் கொடுத்திருந்தனர். ஆனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் இதற்கான கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து  தற்போது வரும் திங்கட்கிழமை வரை அதற்கான அனுமதி வழங்கி இருக்கிறார்கள். எனவே திங்கட்கிழமை வரை தமிழகத்தில் வெளிமாநில  பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியது. திங்கட்கிழமைக்குப் பிறகு வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கினால் போக்குவரத்துத் துறையினுடைய விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் மணல் குவாரிக்கு எதிரான போராட்டத்தில் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணைக்காகக் கடலூர் முதன்மை நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் இன்று ஆஜராகி இருந்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''இரண்டு, மூன்று நாட்கள் விடுமுறை வருவதை ஒட்டி திங்கட்கிழமை வரை தேதி கேட்டிருக்கிறார்கள். போக்குவரத்து ஆணையர் திங்கட்கிழமை வரை வாய்ப்பு கொடுத்துள்ளார். செவ்வாய்க்கிழமைக்கு மேல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க முடியாது'' என்றார்.

'இயக்கினால் எந்த மாதிரி நடவடிக்கை இருக்கும்' எனச் செய்தியாளர்கள் கேள்விக்கு, ''பேருந்துகளை அரசு கையகப்படுத்திக் கொள்ளும். அந்தப் பேருந்தும் மீண்டும் தமிழக பதிவு எண்  மாற்றப்பட்ட பிறகு அவர்கள் செயல்படுத்த முடியும்'' என்றார்.