Skip to main content

"சிறப்பாகப் பணியாற்றுவேன்!" - விழுப்புரம் புதிய டி.ஐ,ஜி. பேட்டி!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

M. Pandian takes charge as the 29th DIG in Villupuram

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜியாக எழிலரசன் பணியமர்த்தப்பட்டார். சில மாதங்களுக்குள் திடீரென்று அவரை சென்னை பெருநகர வடக்குப் போக்குவரத்துக் கழக இணை ஆணையராக மாற்றம் செய்து அறிவிப்பு வெளியானது. அவருக்குப் பதில், அங்கு அதே பணியில் இருந்த எம்.பாண்டியன் விழுப்புரம் சரக 29வது டிஐஜி ஆக அறிவிக்கப்பட்டு, அவர் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

 

அதன் பின்னர், அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “விழுப்புரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் தடுப்பதற்கு முழுக் கவனம் செலுத்தப்படும். மேலும் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வழியிலும் குற்றங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரவுடியிச செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்களை ஒடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துக்களைத் தடுப்பது குறித்தும் தனிக் கவனம் செலுத்தப்படும். விழுப்புரம் சரகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட இடங்களைக் கண்டறிந்து விபத்துகள் நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் குறைகளைத் தெரிவித்து அதற்குத் தீர்வு கண்டுகொள்ளலாம். மேலும், மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாகப் பணியாற்றுவேன்” என்று கூறினார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள டிஐ,ஜி பாண்டியன் அரக்கோணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

 

அவர், காவல் பணியில் சேர்ந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி டி.எஸ்.பி. ஆக பணி செய்துள்ளார். அதன்பின்னர் பதவி உயர்வு பெற்று திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகப் பணிபுரிந்துள்ளார். சென்னை அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் துணை ஆணையராகவும் அதன்பிறகு சென்னை பெருநகர படகுப் போக்குவரத்து இணை ஆணையராகவும் பணி செய்துள்ளார். தற்போது விழுப்புரம் சரக டிஐஜி ஆக பொறுப்பேற்றுள்ள பாண்டியனுக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.