Skip to main content

குலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...!

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்தேர்தல் வேட்புமனு தாக்கல் துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சில ஊராட்சிகளில் தலைவர் உட்பட சில பதவிகளை ஏழம் விட்டும் வருகிறார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அப்படி இருந்தும் கூட சில இடங்களில் மறைமுகமாக தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் ஏலம் போய் கொண்டு தான் இருக்கிறது.

 

local body election issue

 



இந்நிலையில் தேனி அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு குலுக்கல் முறையில் ஆட்கள் தேர்வு செய்யும் சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கொடுவிலார்பட்டி அருகே இருக்கும் ஸ்ரீரங்கபுரம் கிராமத்திற்கு ஒரு ஊராட்சிமன்றத்தலைவர், ஒன்பது ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகள் உள்ளன. இதில் ஊராட்சிமன்றத் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு  ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் ஊர் நடுவே இருக்கும் சமுதாயக் கூடத்தில் ஒன்றுகூடி, ஊராட்சி மன்றத்தலைவர், வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வது குறித்து பேசினர். முடிவில் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் பெயர்களை துண்டுச் சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் தேர்தெடுத்தனர். அதே போல, ஒன்பது  ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் பெயர்களையும் துண்டுச் சீட்டில் எழுதி, வார்டு நம்பர் எழுதி குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கேட்டபோது, "குலுக்கல் முறை ஏலம் விடுதல் அனைத்தும் சட்டப்படி குற்றம். தேனி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவர் ஆகியோரை ஸ்ரீ ரங்கபுரத்திற்கு அனுப்பியிருக்கிறேன். விசாரணை செய்யப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.  
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பதவியேற்பு தீவிரம்;குடியரசுத் தலைவருடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு!

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
Inauguration intensity-BJP leaders meet the President of the Republic

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனிப் பெரும்பான்மை என்ற நிலையை இழந்து கூட்டணி ஆட்சியையே மத்தியில் பாஜக அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 293 இடங்களில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. இதனையொட்டி டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.

17வது மக்களவையை கலைக்க குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரைக்க உள்ளதாகவும்,  வரும் சனிக்கிழமை ( ஜூன்8 ) பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்பார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது டெல்லியில் குடியரசுத் தலைவர் இல்லத்தில் திரௌபதி முர்முவை சந்தித்து பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜநாத் சிங் ஆகியோர் நேரில் சந்தித்து அமைச்சரவையை கலைப்பதற்கான ராஜினாமா கடிதத்தையும் அதற்கான தீர்மானத்தையும் வழங்கினர். ஜூன் 8 ஆம் தேதி மோடி பதவி ஏற்கும் வரை அவர் காபந்து பிரதமராக மோடி நீடிப்பார் என தகவல்கள்  வெளியாகியுள்ளது.

Next Story

மோடி தொடர் பின்னடைவு; சவால் கொடுக்கும் முடிவு நிலவரம் !

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
Continued Modi backlash; Challenging decision situation

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  9.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 283 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 255 இடங்களிலும், மற்றவை 23 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை விட காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது சுற்றிலும் மோடி பின்னடைவை சந்தித்துள்ளார். இரண்டாவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 14,503 வாக்குகளும் மோடி 9,505  வாக்குகளும் பெற்றுள்ள நிலையில் மோடி பின்னடைவைச் சந்தித்துள்ளார்.