Skip to main content

கொடைக்கானலில் போலி மது பாட்டில்களை சாலையில் கொட்டி மக்கள் போராட்டம்!

Published on 13/12/2018 | Edited on 13/12/2018
க்


திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் சுற்றுலா தளமாக இருந்து வருகிறது.  இதனால் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியின் இயற்கையை பார்த்து ரசித்துவிட்டு போய் வருகிறார்கள். இப்படி வரக்கூடிய சுற்றுலா பயணிகளில் பலர் கோடையில் விற்கக்கூடிய மதுபாட்டில்களை வாங்கி போதையில் மிதந்து விட்டும் செல்கிறார்கள். இதனால் கொடைக்கானல் நகர் மற்றும் பெருமாள் மலை பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இருந்தம் கூட மது பாட்டில்களை கள்ள சந்தையில் வாங்கி வந்து  பலர்  அங்கங்கே  சில்லிங் போட்டு விற்பனை செய்து வருகிறார்கள்.  அதன் அடிப்படையில் தான் கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள  பெருமாள் மலையில் கள்ளசந்தையில் வாங்கிய மதுபாட்டில்களை சில்லிங் மூலம்  விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டு இருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள 250க்கு மேற்பட்ட போலி மது பாட்டில்களை சமூக ஆர்வலரான பேத்துப்பாறை சேர்ந்த மகேந்திரன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அந்த மது பாட்டில்களை கைபற்றி அதை கொடைக்கானல் செல்லும் சாலையில் கொட்டி சாலையில் போராட்டத்தில் குதித்தனர்.

 

க்


 இதனால் திண்டுக்கல், பழனி போக்குவரத்து ஒருமணி நேரம்  பாதிக்கப்பட்டது.  இந்த தகவல் போலீசாருக்கு தெரியவே உடனே ஸ்பாட்டுக்கு விசிட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

 

இதுபற்றி சமூக ஆர்வலரான பேத்துப்பாரை மகேந்திரனிடம் கேட்டபோது...ஏற்கனவே பெருமாள் மலையில் டாஸ்மாக் கடை இருந்தது.  அதை பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தான் எடுத்தனர்.  அப்படி இருக்கும் போது கொடைக்கானல் உள்பட சில இடங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை கள்ளசந்தையில் வாங்கி வந்து ஒரு குவாட்டர் பாட்டில் 200 ரூபாய்வரை  சில்லிங் போட்டு கடந்த சில மாதங்களாக விற்பனை செய்து வந்தனர். இதனால் பெரியவர்கள் முதல் இளைஞர்கள்  வரை  போதை பழக்கத்திற்கு அடிமையாகி வந்தனர்.

 

க்

 இந்த விஷயம் தெரிந்து நாங்களும் பல முறை போய் திருட்டு தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வருபவரிடம் இங்கு எல்லாம் சில்லிங் விற்க கூடாது என்று சொல்லியும் கூட தொடர்ந்து விற்பனை செய்து வந்தனர் இது பற்றி அதிகாரிகளிடம் சொல்லியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வந்தனர்.  அதனால்தான் இன்று அப்பகுதி மக்களை திரட்டி கள்ளச் சந்தையில் வாங்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை எடுத்து வந்து சாலையில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டதுடன் மட்டுமல்லாமல் அந்த கடையையும் அடித்து நொறுக்கி விட்டனர்.  அதுபோல் இனிமேல் இப்பகுதியில் சில்லிங்  மது பாட்டிகள் விற்ககூடாது. மீறி யாரும் விற்பனை செய்தால் அப்பகுதி மக்களை திரட்டி தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும்  குதிப்போம்  என்று கூறினார். இச் சம்பவம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு-வருகிறது இ-பாஸ் நடைமுறை?

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
E-pass to Ooty and Kodaikanal

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மலைப் பிரதேசமான உதகை மற்றும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், இன்று அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர். இதனால் உதகை நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கு ஒன்றில் வரும் மே 7ஆம் தேதி முதல் உதகை மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் இ-பாஸ் வாங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இ-பாஸ் முறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என அரசுக்கும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே சுற்றுலாத்தலங்களில் அனுமதி தர வேண்டும். உள்ளூர் மக்களுக்கு இ-பாஸ் நடைமுறையில் இருந்து விலக்கு தர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.