Skip to main content

'அழைப்பை' மறுத்தவள் கட்டையால் அடித்துக்கொலை: கொலையாளி தற்கொலை முயற்சி

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
karuppasamy


நெல்லை மாவட்டத்தின் கலிங்கப்பட்டி அருகேயுள்ள கீழ் மரத்தோணி கிராமத்தின் கீழ்புறக் காலனியைச் சேர்ந்த சந்திரசேகர். கூலித் தொழிலாளியான இவர் கத்தார் நாட்டில் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது இளம் மனைவி சங்கரேஸ்வரி, இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் சங்ரேஸ்வரி, அந்தப் பகுதியில் தன்னுடைய ஆடுகளை மேய்ப்பது வழக்கம்.
 

கணவன் வெளி நாட்டிலிருப்பதால் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்தவரும், சங்கரேஸ்வரியின் சமூகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான கருப்பசாமி (45) அவளோடு பழக்கமாகி, அடிக்கடி செல்போன் மூலம் பேசியும் தங்களின் நட்பை வளர்த்து பழகியுள்ளனர் என்கிறார்கள் அந்தப் பகுதியினர்.


ஒரு லெவலுக்கு மேல் போன வேளையில் தன்னுடைய பழக்கம் வெளி நாட்டிலிருக்கும் தன் கணவனுக்குத் தெரிந்து விடுமோ என்கிற பயம் தொற்றியிருக்கிறது. அதனால் பீதியான சங்கரேஸ்வரி, கருப்பசாமியுடனான தன் பழக்கத்தைத் தவிர்த்திருக்கிறார். போன் வாயிலாக தனது ஆசைக்கு இணங்க வலியுறுத்தி டார்ச்சர் கொடுத்த கருப்பசாமியின் அழைப்பையும் துண்டித்திருக்கிறார். அதனால் வெறியான கருப்பசாமி, நேரிலேயே சங்கரேஸ்வரிக்கு செக்ஸ் டார்ச்சர், கொடுக்க, அதை அவள் கண்டித்திருக்கிறார்.
 

 

 

இதனிடையே நேற்று மதியம், வழக்கம் போல் சங்கரேஸ்வரியும், அதே பகுதியின் மாரியப்பன் மனைவி முருகலட்சுமியும் ஆடுகளை மேய்ப்பதற்காக காட்டுப் பகுதிக்குப் போயிருக்கின்றனர். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட கருப்பசாமி, பகல் மறையாத அந்த நேரத்திலும் அங்கே சென்று சங்கரேஸ்வரியை உறவுக்கு அழைத்திருக்கிறார் அப்போது அவர்களிடயே வாய்த்தகராறு மூண்டிருக்கிறது.

 

karuppasamy


வெறி தலைக்கேறிய நிலையில், ஆத்திரமான கருப்பசாமி, அங்கு கிடந்த கட்டையைக் கொண்டு சங்கரேஸ்வரியை மூர்க்கத்தனமாகத் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சங்ரேஸ்வரியின் மூச்சு சம்பவ இடத்திலேயே அடங்கியிருக்கிறது. இதைப் பார்த்து முருகலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்திலுள்ளவர்கள் திரண்டு வர, தகவல் காவல் நிலையம் பறந்திருக்கிறது. ஸ்பாட்டுக்கு வந்த கரிவலம் இன்ஸ்பெக்டர் சித்ரகலா சங்கரேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விசாரணையை மேற் கொண்டவர் தப்பிய கருப்பசாமியை தேடத் தொடங்கியிருக்கிறார்.
 

 

 

தன்னை போலீஸ் தேடுவதை அறிந்து பொறி கலங்கிப் போன கருப்பசாமி, போலீஸ் பயம் காரணமாக, விவசாயப் பயிருக்குத் தெளிக்கப்படும் குருனை மருந்தினை உட் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். வயலில் மயங்கிக் கிடந்தவரை மீட்டு, சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்திருக்கின்றனர்.


இதனிடையே கொலையுண்ட சங்கரேஸ்வரியின் உடல் போஸ்ட் மார்ட்டத்திற்காக சங்கரன்கோவில், அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நேரத்தில் குற்றவாளி கருப்பசாமியும் சிகிச்சைக்காக அங்கே அனுமதிக்கப்பட்ட தகவலால் அவளது உடலைப் பெற வந்த உறவினர்களிடையே கொந்தளிப்பு நிலவிய சூழலில், அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் பொருட்டு கருப்பசாமியை பாளை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
 

பாலியல் வறட்சியின் தாக்கத்தால் இந்த மூர்க்கத் தனத்தை நடத்திய கருப்பசாமிக்குத் திருமணமாகி நான்கு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
 

 


 

சார்ந்த செய்திகள்