Skip to main content

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; அக்கா கண்ணெதிரே தம்பிக்கு நேர்ந்த சோகம்

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

karur esanatham road two wheeler indent for brother and sister

 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் வாகன விபத்தில் பள்ளி மாணவர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

 

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் நவீன்குமார் (வயது 15). இவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ஈசநத்தம் பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி மாணவனுக்கு சொந்தமான இருசக்கர மோட்டார் வாகனத்தில் அவரது அக்கா பிரியாவுடன் (வயது 16)  ஈசநத்தம் சென்றுள்ளார்.

 

அப்போது ஈசநத்தம் தனியார் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த மற்றொரு டூவீலர் மீது மோதி கரூர் திண்டுக்கல் செல்லும் தனியார் பேருந்துக்கு அடியில் விழுந்து மாணவன் நவீன்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவனின் சகோதரி லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் ஏற்பட்டவுடன் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

 

உடனே அப்பகுதி பொதுமக்கள் அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த மாணவன் நவீன்குமார் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர். பள்ளி மாணவன் தனியார் பேருந்தில் அடிப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரவக்குறிச்சி காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்