Skip to main content

வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் தாய் மனநல காப்பகத்தில் சேர்ப்பு!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020
incident in pudukottai

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் தாலுகா, ஏம்பல் கிராமத்தில் கடந்த மாதம் 30 ந் தேதி காணாமல்போன 7 வயது சிறுமி, மறுநாள் அதே பகுதியில் உள்ள கிழவி தம்மம் ஊரணியில் உடலெங்கும் காயங்களுடன் செடி கொடிகளுக்கு மத்தியில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் கொலையாளியை உடனே கைது செய்ய உத்தரவிட்டார். அடுத்த சில மணி நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த சாமிவேல் (எ) ராஜாவை  கைது செய்தனர்.

தொடர்ந்து முதலமைச்சர் நிவாரணம் அறிவிக்கப்பட்டதுடன், மாவட்ட நிர்வாக நிவாரணம் ஆகிய இரு நிவாரணங்களையும் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி வழங்கினார். இதனை தொடர்ந்து திமுக, காங்கிரஸ், தேமுதிக, உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் விஜய் ரசிகர்களும் நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்கள்.

 

incident in pudukottai

 

சிறுமியை இழந்து வாடும் குடும்பத்தினர் மனதளவில் பாதக்கப்படக்கூடாது என்பதற்காக மனநல ஆலோசனை வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார்.  அதன்பேரில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர். கார்த்திக் தெய்வநாயகம் தலைமையில், மனநல சமூகப்பணியாளர்கள் கனகராஜ், முருகானந்தம், அஞ்சலி தேவி, மேரி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் வீட்டிற்கு சென்று மனநல ஆலோசனைகள் வழங்கியதுடன் மருந்துகளும் வழங்கினார்கள். மேலும் சிகிச்சை தேவைப்படும்போது சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியை  நினைத்து, நினைத்து அவரது தாய் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த மருத்துவக் குழுவினர், சிறுமியின் தாய் மேலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சிகிச்சைக்காக 102 சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று அன்னவாசல் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மகளை பறிகொடுத்து மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள தாய்க்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவக்குழுவினர் கூறினார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்